ETV Bharat / state

பண்ணாரி அம்மன் கோயிலில் பேட்டரி கார் வசதி ஏற்பாடு! - நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஐந்து பேர் பயணம் செய்யும் வகையில் புதியதாக பேட்டரி கார் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 3, 2022, 7:39 PM IST

ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பண்ணாரி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஐந்து பேர் பயணம் செய்யும் வகையில் புதியதாக பேட்டரி கார் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

ரூபாய் ஆறு லட்சம் மதிப்புள்ள பேட்டரி காரை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்வி குழுமங்கள் சார்பில் கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டரி காருக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில் - அமைச்சர் நாசர்

ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பண்ணாரி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஐந்து பேர் பயணம் செய்யும் வகையில் புதியதாக பேட்டரி கார் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

ரூபாய் ஆறு லட்சம் மதிப்புள்ள பேட்டரி காரை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்வி குழுமங்கள் சார்பில் கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டரி காருக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:விரைவில் ஆவின் குடிநீர் பாட்டில் - அமைச்சர் நாசர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.