தமிழ்நாடு முழுவதும், வெப்பத்தின் தாக்கத்தால் வறட்சி நிலவிவருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால், அங்கு வசிக்கும் குரங்குகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.
தண்ணீரின்றி வாடிய குரங்களுக்கு தர்பூசணி வழங்கிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
ஈரோடு: சத்தியமங்கலத்தில் தண்ணீரின்றி வாடிய குரங்குகளுக்கு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்பூசணி பழங்களை வழங்கினர்.
![தண்ணீரின்றி வாடிய குரங்களுக்கு தர்பூசணி வழங்கிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3305578-thumbnail-3x2-gyuyuy.jpg?imwidth=3840)
இதனை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அடிக்கடி பயனிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கர்,ராமன்,ராஜசேகர் ஆகியோர் பார்த்து வருந்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த ஊழியர்கள், தங்களால் முடிந்த அளவு தர்பூசணி பழங்களை வாங்கி அந்த குரங்குகளுக்கு கொடுத்துள்ளனர். இவர்களின் இந்தச் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும், வெப்பத்தின் தாக்கத்தால் வறட்சி நிலவிவருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால், அங்கு வசிக்கும் குரங்குகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.
இதனை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அடிக்கடி பயனிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கர்,ராமன்,ராஜசேகர் ஆகியோர் பார்த்து வருந்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த ஊழியர்கள், தங்களால் முடிந்த அளவு தர்பூசணி பழங்களை வாங்கி அந்த குரங்குகளுக்கு கொடுத்துள்ளனர். இவர்களின் இந்தச் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
17.05.2019
தண்ணீரின்றி வாடிய குரங்களுக்கு தர்ப்பூசணி வழங்கிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பாதையில் தண்ணீரின்றி வாடிய குரங்குகளுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இயற்கையான தர்ப்பூசணி பழங்களை வழங்கினர். இதற்கு பல தரப்பினரும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை பாராட்டினர்.
சத்தியமங்கலம் புலிகள்
கடம்பூர் மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இங்கு குளம், குட்டைகள் இல்லாத நிலையில் மழைபொழிவு காலங்களில் தண்ணீர் மலைச்சரிவில் அருவாகிய
உருவெடுத்து பெரும்பள்ளம் நீர்த்தேக்கத்தில் கலக்கிறது. இதனால்
கடம்பூர் மலைப்பகுதி வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில்
சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன.
இந்த சாலை வழியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கர்,ராமன்,ராஜசேகர் ஆகியோர் அடிக்கடி பயணிக்கும்போது குரங்குகள் தண்ணீரின்றி தவிப்பதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து கடம்பூரில் உள்ள நோயாளிகளை அழைத்துவர செல்லும்போது மல்லியம்மன்
கோவில் அருகே திரியும் குரங்குகளுக்கு இயற்கையான முறையில் சாகுபடி செய்த, தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி பழங்களை வழங்கி குரங்களுக்கு உதவினர். இதனால் ஆம்புலன்ஸை பார்த்தாலே குரங்குகள் ஆர்வத்துடன் துள்ளிகுதித்து ஓடி
வரும். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த மனிதாபிமான செயல்களை கண்டு
பாராட்டினர்.