ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேவுள்ள புதுக்கொத்துகாடு காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமசாமி. இவரது மனைவி நித்யா, நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், 108 அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி ஓட்டுநர் கார்த்திக், மருத்துவ உதவியாளர் பாரதி ஆகியோர் நித்யாவை அவசர ஊர்தி மூலம் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது, ஜல்லியூர் அருகே அவசர ஊர்தி சென்றுகொண்டிருந்தபோது நித்யா பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனால், மருத்துவ உதவியாளர் பாரதி அவசர ஊர்திலேயே நித்தியாவுக்கு பிரசவம் பார்த்தார்.
இதையடுத்து, சுகப்பிரசவத்தில் நித்யாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு தாயும் சேயும் நலமாகவுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்: சாதனை படைத்த அரசு மருத்துவர்கள்!