ETV Bharat / state

புகைப்படங்கள் ஒளியின் மொழி, அனுபவங்களின் பிம்பம்! - உலக புகைப்பட தினம்

author img

By

Published : Aug 19, 2020, 6:42 PM IST

Updated : Aug 19, 2020, 7:13 PM IST

புகைப்படங்களைப் போன்றதொரு பொக்கிஷம் இந்த நூற்றாண்டில் உண்டா? வார்த்தைகளோ, சத்தமோ எதுவுமின்றி ஒளியைக் கொண்டு ஓராயிரம் விஷயங்களைக் கடத்தத் தெரியும் புகைப்படங்களுக்கு! மனிதர்களது நினைவுகளை ஒளியால் மொழிப்பெயர்த்து எப்போதைக்குமாக சேமித்துத் தரும் புகைப்படங்களுக்கான தினம் இன்று.

உலக புகைப்பட தினம்!
உலக புகைப்பட தினம்!

கடந்த 13ஆம் நூற்றாண்டில் முதல் புகைப்படம் உருவானது. உலகிலேயே முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம் எட்டு மணி நேரத்திற்கு பிறகு மறைந்து போனது. அதன் பிறகு கண்ணாடி பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார் சர் ஜான் ஹெர்செல். இவரே ‘போட்டோகிராஃபி’ என்ற பெயரைத் தந்தவர்.

புகைப்படத்திற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 181ஆவது புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களை சிறந்த ’செய்திக் கடத்தி’ என்றே சொல்லலாம். ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு ஒரு செய்தியை விளக்குவதைக் காட்டிலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீரியமான புகைப்படம் ஒன்று போதுமானது.

மனிதர்களிடம் இருக்கும் மிகச் சிறந்த கலைகளுள் ஒன்று புகைப்படக் கலை. அதிலும், காட்டு உயிர் புகைப்படக் கலைஞர்களுக்கு அது கண்கள் மேல் கேமரா தந்த வரம். முக்கியமாக வனங்களையும் வன உயிர்களையும் அவர்கள் காண்பதில்லை, உணர்வார்கள். காண்பதற்கும் உணர்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களின் உணர்வு நமக்கு ஒரு காட்சி வழியான காட்டை கைவசப்படுத்தி அளிக்கிறது.

செந்தில் குமரனின் கண்கள் கிளிக்கிய பறவை
செந்தில் குமரனின் கண்கள் கிளிக்கிய பறவை

இந்தக் கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அடர்ந்த காடுகளில் அசாத்திய பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களின் வாயிலாக நம்மை அதிசயிக்க வைக்கிறார் காட்டு உயிர் புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். செந்திலின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம், பாலராஜக்காப்பட்டி. தந்தை அரசு அலுவலர், தாய் ஆசிரியை. இருவரும் பொறுப்பு மிகுந்த பணியில் இருந்ததால் சிறு வயது முதலே கண்டிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார் செந்தில். அவரது தாயின் ஆசைப்படி தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற இலக்குடன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தார்.

பின்னர் பெட்ரோல் பங்குகளுக்கு தேவைப்படும் பெரிய கன்டெய்னர் தயாரிக்கும் தொழிலை தனக்கு சொந்தமான இடத்தில் தொடங்கினார். பொறியியல் படித்துவிட்டு தொழில் முனைவோராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செந்தில் வன உயிர் புகைப்படக்காரராக ஏன் மாறினார்? அவர் கூறும் விஷயங்கள் நம்மை அதிசயிக்க வைப்பதோடு மட்டுமின்றி, வனம், வன உயிர்கள் குறித்த புரிதலையும் அளிக்கின்றன.

புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன்
புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன்

எப்படி இந்த புகைப்படப் பயணம் சாத்தியமானது என செந்திலிடம் கேட்டோம். “கிராமத்தில் பிறந்ததால் இயற்கையோடும் கால்நடைகளோடும் அதிகம் பயணிக்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள தென்னை, வாழை, வேப்ப மரங்கள், ஆடு, மாடு, கோழி என எங்களுடன் அவைகளும் உறவுகள்போல வளர்ந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது. முதன்முதலாக எனது செல்ஃபோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தேன். மான், யானை என படம் எடுக்க ஆரம்பித்ததும் கேமரா வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றி எனது தேடலின் தீவிரத்தை உணர்த்தியது. பின்னர் முழுவதுமாக இதை செய்ய முடிவு செய்து புது கேமரா வாங்கினேன்.

செந்தில் குமரம் புகைப்படமெடுத்த புலி
செந்தில் குமரம் புகைப்படமெடுத்த புலி

புலிகளின் கம்பீரத்தைக் காண்பது எப்போதும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அதனாலோ என்னவோ நான் அதிகம் காட்சிப்படுத்தியது புலிகள்தான். அதன் அடர் நிறமும், உடலின் ஊடே படரும் கருப்புக் கோடுகளும் சூரிய ஓளியில் மிளிரும் காட்சியை பலமுறை எனது கேமராக் கண்களில் பதிவு செய்துள்ளேன். உண்மையில் சிங்கத்தைவிட புலிகள்தான் அதிக வசீகரமானவை. அவற்றின் கூர்மையான பார்வை நெருங்குவதற்கு அல்ல பார்ப்பதற்கே நம்மை அச்சம் கொள்ளச் செய்திடும்.

காட்டு நாய், புகைப்படம்: செந்தில்
காட்டு நாய், புகைப்படம்: செந்தில்

ஆனால் புகைப்படம் எடுத்தல் என்பதோடு மட்டுமல்லாமல் வன உயிர்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் குறித்தும் பதிவு செய்யத் தொடங்கினேன். மனிதர்களைப் போலவே வன உயிர்களுக்கும் மூன்று முக்கியத் தேவைகள் உள்ளன. உணவு, உறைவிடம், இனப்பெருக்கம். இதற்கான போராட்டங்கள், அதில் அவை காணும் வெற்றிகள் ஒவ்வொரு வன உயிரின் வாழ்வையும் தீர்மானிக்கிறது. காடுகளுக்குள் பயணிப்பது போன்ற சாகசப் பயணம் அலாதி இன்பத்தைத் தந்தது” என்றார்.

உலக புகைப்பட தினம் குறித்த காணொலி

சமூக வலைதளங்களில் பதிவிட்ட தனது புகைப்படங்கள்தான் அதிக உத்வேகத்துடன் தன்னைப் பயணிக்கத் தூண்டியது என்கிறார் செந்தில். ஒரு படைப்புக்கான அங்கீகாரம்தானே அடுத்து படைப்புக்கான உந்துதல். இதில் உள்ள மற்றொரு சவால் அமைதியாகக் காத்திருப்பது. உலகின் மிகப்பெரிய காத்திருப்பாளன் புகைப்படக் கலைஞன்தான்.

செந்தில் குமரன் நீண்ட நாள்கள் தேடிய கருஞ்சிறுத்தை
செந்தில் குமரன் நீண்ட நாள்கள் தேடிய கருஞ்சிறுத்தை

புகைப்படம் ஒளியின் மொழி...அதனை புகைப்படக்காரர்கள் வசப்படுத்த என்னவெல்லாம் மெனக்கெட வேண்டியுள்ளது?

புகைப்படங்களின் மொழியை எந்த நாட்டினரும், இனத்தவரும், மொழியினரும் தடையின்றி அறிந்து கொள்வார்கள். இதனை நாம் சரியாகத் தந்திட தருணங்கள் அமைய வேண்டுமெனில் காத்திருப்பு கட்டாயம். பல நாள்கள், பல நூறு மைல்கள் கடந்த பெரும் பயணத்தில் நமக்கான வினாடி எது என அறியாவிட்டாலும், அதற்குத் தயாராக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். புகைப்படங்களுக்குள் இருப்பது ஒரு நிகழ்வின் பிம்பம் மட்டுமல்ல, அது ஒரு அனுபவம்.

இதையும் படிங்க:வார்த்தைகள் இல்லை ஒளி பேசும்... உலக புகைப்பட தினம்!

கடந்த 13ஆம் நூற்றாண்டில் முதல் புகைப்படம் உருவானது. உலகிலேயே முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம் எட்டு மணி நேரத்திற்கு பிறகு மறைந்து போனது. அதன் பிறகு கண்ணாடி பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார் சர் ஜான் ஹெர்செல். இவரே ‘போட்டோகிராஃபி’ என்ற பெயரைத் தந்தவர்.

புகைப்படத்திற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 181ஆவது புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களை சிறந்த ’செய்திக் கடத்தி’ என்றே சொல்லலாம். ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு ஒரு செய்தியை விளக்குவதைக் காட்டிலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீரியமான புகைப்படம் ஒன்று போதுமானது.

மனிதர்களிடம் இருக்கும் மிகச் சிறந்த கலைகளுள் ஒன்று புகைப்படக் கலை. அதிலும், காட்டு உயிர் புகைப்படக் கலைஞர்களுக்கு அது கண்கள் மேல் கேமரா தந்த வரம். முக்கியமாக வனங்களையும் வன உயிர்களையும் அவர்கள் காண்பதில்லை, உணர்வார்கள். காண்பதற்கும் உணர்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களின் உணர்வு நமக்கு ஒரு காட்சி வழியான காட்டை கைவசப்படுத்தி அளிக்கிறது.

செந்தில் குமரனின் கண்கள் கிளிக்கிய பறவை
செந்தில் குமரனின் கண்கள் கிளிக்கிய பறவை

இந்தக் கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அடர்ந்த காடுகளில் அசாத்திய பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களின் வாயிலாக நம்மை அதிசயிக்க வைக்கிறார் காட்டு உயிர் புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். செந்திலின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம், பாலராஜக்காப்பட்டி. தந்தை அரசு அலுவலர், தாய் ஆசிரியை. இருவரும் பொறுப்பு மிகுந்த பணியில் இருந்ததால் சிறு வயது முதலே கண்டிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார் செந்தில். அவரது தாயின் ஆசைப்படி தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற இலக்குடன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தார்.

பின்னர் பெட்ரோல் பங்குகளுக்கு தேவைப்படும் பெரிய கன்டெய்னர் தயாரிக்கும் தொழிலை தனக்கு சொந்தமான இடத்தில் தொடங்கினார். பொறியியல் படித்துவிட்டு தொழில் முனைவோராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செந்தில் வன உயிர் புகைப்படக்காரராக ஏன் மாறினார்? அவர் கூறும் விஷயங்கள் நம்மை அதிசயிக்க வைப்பதோடு மட்டுமின்றி, வனம், வன உயிர்கள் குறித்த புரிதலையும் அளிக்கின்றன.

புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன்
புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன்

எப்படி இந்த புகைப்படப் பயணம் சாத்தியமானது என செந்திலிடம் கேட்டோம். “கிராமத்தில் பிறந்ததால் இயற்கையோடும் கால்நடைகளோடும் அதிகம் பயணிக்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள தென்னை, வாழை, வேப்ப மரங்கள், ஆடு, மாடு, கோழி என எங்களுடன் அவைகளும் உறவுகள்போல வளர்ந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது. முதன்முதலாக எனது செல்ஃபோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தேன். மான், யானை என படம் எடுக்க ஆரம்பித்ததும் கேமரா வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றி எனது தேடலின் தீவிரத்தை உணர்த்தியது. பின்னர் முழுவதுமாக இதை செய்ய முடிவு செய்து புது கேமரா வாங்கினேன்.

செந்தில் குமரம் புகைப்படமெடுத்த புலி
செந்தில் குமரம் புகைப்படமெடுத்த புலி

புலிகளின் கம்பீரத்தைக் காண்பது எப்போதும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அதனாலோ என்னவோ நான் அதிகம் காட்சிப்படுத்தியது புலிகள்தான். அதன் அடர் நிறமும், உடலின் ஊடே படரும் கருப்புக் கோடுகளும் சூரிய ஓளியில் மிளிரும் காட்சியை பலமுறை எனது கேமராக் கண்களில் பதிவு செய்துள்ளேன். உண்மையில் சிங்கத்தைவிட புலிகள்தான் அதிக வசீகரமானவை. அவற்றின் கூர்மையான பார்வை நெருங்குவதற்கு அல்ல பார்ப்பதற்கே நம்மை அச்சம் கொள்ளச் செய்திடும்.

காட்டு நாய், புகைப்படம்: செந்தில்
காட்டு நாய், புகைப்படம்: செந்தில்

ஆனால் புகைப்படம் எடுத்தல் என்பதோடு மட்டுமல்லாமல் வன உயிர்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் குறித்தும் பதிவு செய்யத் தொடங்கினேன். மனிதர்களைப் போலவே வன உயிர்களுக்கும் மூன்று முக்கியத் தேவைகள் உள்ளன. உணவு, உறைவிடம், இனப்பெருக்கம். இதற்கான போராட்டங்கள், அதில் அவை காணும் வெற்றிகள் ஒவ்வொரு வன உயிரின் வாழ்வையும் தீர்மானிக்கிறது. காடுகளுக்குள் பயணிப்பது போன்ற சாகசப் பயணம் அலாதி இன்பத்தைத் தந்தது” என்றார்.

உலக புகைப்பட தினம் குறித்த காணொலி

சமூக வலைதளங்களில் பதிவிட்ட தனது புகைப்படங்கள்தான் அதிக உத்வேகத்துடன் தன்னைப் பயணிக்கத் தூண்டியது என்கிறார் செந்தில். ஒரு படைப்புக்கான அங்கீகாரம்தானே அடுத்து படைப்புக்கான உந்துதல். இதில் உள்ள மற்றொரு சவால் அமைதியாகக் காத்திருப்பது. உலகின் மிகப்பெரிய காத்திருப்பாளன் புகைப்படக் கலைஞன்தான்.

செந்தில் குமரன் நீண்ட நாள்கள் தேடிய கருஞ்சிறுத்தை
செந்தில் குமரன் நீண்ட நாள்கள் தேடிய கருஞ்சிறுத்தை

புகைப்படம் ஒளியின் மொழி...அதனை புகைப்படக்காரர்கள் வசப்படுத்த என்னவெல்லாம் மெனக்கெட வேண்டியுள்ளது?

புகைப்படங்களின் மொழியை எந்த நாட்டினரும், இனத்தவரும், மொழியினரும் தடையின்றி அறிந்து கொள்வார்கள். இதனை நாம் சரியாகத் தந்திட தருணங்கள் அமைய வேண்டுமெனில் காத்திருப்பு கட்டாயம். பல நாள்கள், பல நூறு மைல்கள் கடந்த பெரும் பயணத்தில் நமக்கான வினாடி எது என அறியாவிட்டாலும், அதற்குத் தயாராக பொறுமையோடு காத்திருக்க வேண்டும். புகைப்படங்களுக்குள் இருப்பது ஒரு நிகழ்வின் பிம்பம் மட்டுமல்ல, அது ஒரு அனுபவம்.

இதையும் படிங்க:வார்த்தைகள் இல்லை ஒளி பேசும்... உலக புகைப்பட தினம்!

Last Updated : Aug 19, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.