ETV Bharat / state

உக்ரைனில் திக்... திக்...! மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் கண்ணீர்

author img

By

Published : Feb 26, 2022, 5:08 PM IST

உக்ரைனின் சிக்கித்தவிக்கும் நிலக்கோட்டை அருகே அம்மாபட்டியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுரி மாணவரை மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்விடுத்தனர்.

பெற்றோர் கண்ணீர்
பெற்றோர் கண்ணீர்

திண்டுக்கல்: ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் மூன்றாவது நாளாகப் போர் நடந்துவரும் சூழலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அங்குச் சிக்கியுள்ள நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர், வெடி சத்தமும் அபாய ஒலியும் அச்சத்தில் ஆழ்த்துவதாகக் கூறி காணொலி ஒன்றை பெற்றோருக்கு அனுப்பியது அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகன் சிரில் போஸ்க்கோ உக்ரைனின் செர்னோபில் அருகேயுள்ள ஜெப்ரோசியா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றார்.

அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும், ஆனாலும் மூன்று நாள்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மிகுந்த வேதனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுதல் பல நேரங்களில் அவரைத் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இணையம், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், இதனால் மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளதாகவும் - மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.

இது குறித்து உக்ரைனிலிருந்து மாணவர் சிரில் போஸ்க்கோ இன்று ஒரு காணொலியைப் பெற்றோருக்கு அனுப்பியுள்ளது அவர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது. அதில் சிரில் போஸ்க்கோ, "இன்றுமுதல் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், இணையச் சேவை முடங்கியுள்ளது. நேற்றுமுதல் அடிக்கடி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுவருகிறது.

அடிக்கடி தங்கள் குடியிருப்பைச் சுற்றி வெடிச் சத்தம் கேட்கிறது. இதனால் இரண்டு நாள்களாகத் தூக்கமின்றி தரைத்தளத்தில் பதுங்கியிருக்கிறேன், மிகுந்த அச்சமாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

எனவே உக்ரைனில் சிக்கியுள்ள சிரில் போஸ்க்கோ உள்பட 50 மாணவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது பெற்றோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் உள்ள மாணவர்களுடன் ஸ்டாலின் வீடியோகால்!

திண்டுக்கல்: ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் மூன்றாவது நாளாகப் போர் நடந்துவரும் சூழலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அங்குச் சிக்கியுள்ள நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர், வெடி சத்தமும் அபாய ஒலியும் அச்சத்தில் ஆழ்த்துவதாகக் கூறி காணொலி ஒன்றை பெற்றோருக்கு அனுப்பியது அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகன் சிரில் போஸ்க்கோ உக்ரைனின் செர்னோபில் அருகேயுள்ள ஜெப்ரோசியா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றார்.

அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும், ஆனாலும் மூன்று நாள்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மிகுந்த வேதனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுதல் பல நேரங்களில் அவரைத் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இணையம், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், இதனால் மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளதாகவும் - மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.

இது குறித்து உக்ரைனிலிருந்து மாணவர் சிரில் போஸ்க்கோ இன்று ஒரு காணொலியைப் பெற்றோருக்கு அனுப்பியுள்ளது அவர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது. அதில் சிரில் போஸ்க்கோ, "இன்றுமுதல் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், இணையச் சேவை முடங்கியுள்ளது. நேற்றுமுதல் அடிக்கடி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுவருகிறது.

அடிக்கடி தங்கள் குடியிருப்பைச் சுற்றி வெடிச் சத்தம் கேட்கிறது. இதனால் இரண்டு நாள்களாகத் தூக்கமின்றி தரைத்தளத்தில் பதுங்கியிருக்கிறேன், மிகுந்த அச்சமாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

எனவே உக்ரைனில் சிக்கியுள்ள சிரில் போஸ்க்கோ உள்பட 50 மாணவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது பெற்றோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் உள்ள மாணவர்களுடன் ஸ்டாலின் வீடியோகால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.