ETV Bharat / state

இருவேறு சாலை விபத்து; கூலி தொழிலாளி உயிரிழப்பு, இளைஞர் படுகாயம்!

author img

By

Published : Mar 10, 2021, 12:45 PM IST

அரவக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

அரவக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
அரவக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தன் (52). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டிக்கு பணிக்குச் சென்றுவிட்டு நேற்று (மார்ச்9) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மேட்டுப்பட்டி பிரிவு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முற்பட்டபோது, கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த வீரகுமார் (25) என்ற இளைஞர் பள்ளப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதில் தலை, இடது கால் பகுதியில் முறிவு ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து ஏற்பட்ட பிறகு தப்பியோடிய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர். இருவேறு விபத்துக்கள் குறித்தும் அரவக்குறிச்சி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இர்ஃபான், கோனி அதிரடி வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி!

திண்டுக்கல்: திண்டுக்கல் ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தன் (52). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டிக்கு பணிக்குச் சென்றுவிட்டு நேற்று (மார்ச்9) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மேட்டுப்பட்டி பிரிவு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முற்பட்டபோது, கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த வீரகுமார் (25) என்ற இளைஞர் பள்ளப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி தூக்கி வீசப்பட்டார்.

இதில் தலை, இடது கால் பகுதியில் முறிவு ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து ஏற்பட்ட பிறகு தப்பியோடிய லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர். இருவேறு விபத்துக்கள் குறித்தும் அரவக்குறிச்சி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இர்ஃபான், கோனி அதிரடி வீண்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.