ETV Bharat / state

அமைச்சரின் நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியை கடைபிடித்த காலணிகள்!

author img

By

Published : Apr 24, 2020, 4:40 PM IST

திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வரையப்பட்டிருந்த வட்டத்தில் மக்கள் காலணிகளை வைத்துச் சென்ற சம்பவம் பலரிடையே பேசுபொருளாகியுள்ளது.

social distancing should not followed in minister dindigul seenivasan program
social distancing should not followed in minister dindigul seenivasan program

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்து உணவிற்காக தவித்துவரும் மக்களுக்கு உதவும்வகையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இந்த திட்டத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவினைப் பெற வந்திருந்த மக்கள் அனைவரும் கும்பலாக கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். மேலும், அரசின் திட்டங்களையும், மக்களின் நலன் காக்க தகுந்த இடைவெளியை வலியுறுத்தவேண்டிய அமைச்சரும் அதனைப் பின்பற்றாமல் தன்னைச் சுற்றி கூட்டம் சேர்த்து இருந்துள்ளார். அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதும் தகுந்த இடைவெளியினைக் கடைபிடிக்கவில்லை.

தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வரையப்பட்டிருந்த வட்டத்தில் காலணிகளை வைத்த மக்கள்

அரசு நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அமைச்சர் தலைமையில் இது போன்ற நிகழ்ச்சி நடப்பது சர்ச்சையாகி உள்ளது.

இதனிடையே திண்டுக்கல் கோபால் நகர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் கூட்டு காய்கறி பொருள்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வரையப்பட்டிருந்த வட்டங்களில் தங்களது காலணிகளை வைத்துவிட்டு, சாலை ஓரங்களில் நின்று கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கரோனா வைரஸைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: விலங்குகள் மூலம் கரோனா பரவல்: தயார் நிலையில் அரசு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்து உணவிற்காக தவித்துவரும் மக்களுக்கு உதவும்வகையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூ மார்க்கெட்டில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இந்த திட்டத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவினைப் பெற வந்திருந்த மக்கள் அனைவரும் கும்பலாக கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். மேலும், அரசின் திட்டங்களையும், மக்களின் நலன் காக்க தகுந்த இடைவெளியை வலியுறுத்தவேண்டிய அமைச்சரும் அதனைப் பின்பற்றாமல் தன்னைச் சுற்றி கூட்டம் சேர்த்து இருந்துள்ளார். அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதும் தகுந்த இடைவெளியினைக் கடைபிடிக்கவில்லை.

தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வரையப்பட்டிருந்த வட்டத்தில் காலணிகளை வைத்த மக்கள்

அரசு நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அமைச்சர் தலைமையில் இது போன்ற நிகழ்ச்சி நடப்பது சர்ச்சையாகி உள்ளது.

இதனிடையே திண்டுக்கல் கோபால் நகர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் கூட்டு காய்கறி பொருள்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வரையப்பட்டிருந்த வட்டங்களில் தங்களது காலணிகளை வைத்துவிட்டு, சாலை ஓரங்களில் நின்று கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கரோனா வைரஸைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: விலங்குகள் மூலம் கரோனா பரவல்: தயார் நிலையில் அரசு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.