ETV Bharat / state

பள்ளி விடுமுறை அறிவிப்பதில் தாமதம்: மழையால் வீடு திரும்ப முடியாமல் தவித்த மாணவர்கள்!

author img

By

Published : Oct 30, 2019, 2:53 PM IST

திண்டுக்கல்: பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பை தாமதமாக அறிவித்ததால் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பாதி வழியில் வீடு திரும்பினர்.

school

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முதலே பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக விடுமுறை அறிவித்தது. இதனால் திண்டுக்கல் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மழையின் தீவிரத்தை அறிந்து ஒன்பது மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்தார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் திரும்பிச் செல்ல இயலாமல் மழையில் மாட்டிக்கொண்டு தவித்தனர்.

மழையால் வீடு திரும்ப முடியாமல் தவித்த மாணவர்கள்!

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வழக்கம்போல் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தபின்னரே விடுமுறை அறிவித்தால் இந்த மலையில் எப்படி அவர்கள் விடு திரும்பிச் செல்ல இயலும். தொலைவான பகுதிகளிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்தில் நிற்கக்கூட முடியாமல் மழையில் நனைந்தபடி பேருந்திற்காகக் காத்திருந்தனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் பிள்ளைகளின் நிலையைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முதலே பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக விடுமுறை அறிவித்தது. இதனால் திண்டுக்கல் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து மழையின் தீவிரத்தை அறிந்து ஒன்பது மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்தார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் திரும்பிச் செல்ல இயலாமல் மழையில் மாட்டிக்கொண்டு தவித்தனர்.

மழையால் வீடு திரும்ப முடியாமல் தவித்த மாணவர்கள்!

இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வழக்கம்போல் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தபின்னரே விடுமுறை அறிவித்தால் இந்த மலையில் எப்படி அவர்கள் விடு திரும்பிச் செல்ல இயலும். தொலைவான பகுதிகளிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்தில் நிற்கக்கூட முடியாமல் மழையில் நனைந்தபடி பேருந்திற்காகக் காத்திருந்தனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் பிள்ளைகளின் நிலையைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!

Intro:திண்டுக்கல் 30.10.19

விடுமுறை அறிவிப்பு தாமதமாக வெளியானதால் மழையில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்.



Body:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, நெல்லை, தேனி, நாகை, கடலூர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொடர் கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக விடுமுறை அறிவித்தது. இதனால் திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது பள்ளி விடுமுறை இல்லை என்று பள்ளிக்குச் சென்றனர். ஆனால் ஒன்பது மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்தார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் திரும்பி செல்ல இயலாமல் மழையில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெற்றோர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அறிவிக்காமலேயே இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து பிள்ளைகள் பள்ளிக்கு வந்தபின்னர் விடுமுறை அறிவித்தால் இந்த மலையில் எப்படி அவர்கள் திரும்பிச் செல்ல இயலும். மேலும் தொலைவான கிராம பகுதிகளுலிருந்து வரும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் நிற்கக்கூட முடியாமல் மழையில் நனைந்தபடி பேருந்திற்காக காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சிறிதுகூட சிந்திக்காமல் செயல்படலாமா என கேள்வி எழுப்பினர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.