ETV Bharat / state

காவலர்களுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள் கைது: வைரலான காணொலி!

திண்டுக்கல்லில் சோதனைச்சாவடியிலிருந்த காவல் துறையினரும், இளைஞர்களும் மோதிக்கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

author img

By

Published : Jun 26, 2021, 2:15 PM IST

காவல் துறையினரை தாக்கிய இளைஞர்கள்
காவல் துறையினரை தாக்கிய இளைஞர்கள்

திண்டுக்கல்: உசிலம்பட்டி அருகேவுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு சென்றுள்ளனர். அப்போது திண்டுக்கல், விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சோதனைச்சாவடி தடுப்புகள் மீது இருசக்கர வாகனத்தை கொண்டு மோதியுள்ளனர்.

காவலர்கள்-இளைஞர்களிடையே மோதல்

இதனைக் கண்ட காவல் துறையினர், அந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர், இளைஞர்களை அடிக்க முற்பட்டனர். அப்போது, அவர்கள் அங்கிருந்த தென்னை மட்டை, உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு காவல் துறையினரைத் தாக்கினர்.

காவல் துறையினரைத் தாக்கிய இளைஞர்கள்

இதையடுத்து, காவலர்களைத் தாக்கிய முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையினரும், இளைஞர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக மதுரையில் தங்கியிருந்த இலங்கையர்கள்

திண்டுக்கல்: உசிலம்பட்டி அருகேவுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு சென்றுள்ளனர். அப்போது திண்டுக்கல், விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சோதனைச்சாவடி தடுப்புகள் மீது இருசக்கர வாகனத்தை கொண்டு மோதியுள்ளனர்.

காவலர்கள்-இளைஞர்களிடையே மோதல்

இதனைக் கண்ட காவல் துறையினர், அந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த காவல் துறையினர், இளைஞர்களை அடிக்க முற்பட்டனர். அப்போது, அவர்கள் அங்கிருந்த தென்னை மட்டை, உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு காவல் துறையினரைத் தாக்கினர்.

காவல் துறையினரைத் தாக்கிய இளைஞர்கள்

இதையடுத்து, காவலர்களைத் தாக்கிய முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல் துறையினரும், இளைஞர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக மதுரையில் தங்கியிருந்த இலங்கையர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.