ETV Bharat / state

தீபாவளி: மலைவாழ் மக்களுடன் காவலர்கள், வனத்துறையினர் கொண்டாட்டம்

author img

By

Published : Oct 24, 2022, 5:35 PM IST

பழனியில் மலைவாழ் மக்களுக்கு புத்தாடை வழங்கி காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடினர்.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்டம்

திண்டுக்கல்: பழனி அருகே சண்முகம்பாறைப் பகுதியில் உள்ள கணவாய் மேட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றித் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசக்தி, பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், பழனி வனத்துறை அலுவலர் தலைமையிலான காவல் துறையினர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

மலைவாழ் மக்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. வனத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று பொருட்களை வழங்கியதால் மலைவாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி கொண்டாட்டம்

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல்: பழனி அருகே சண்முகம்பாறைப் பகுதியில் உள்ள கணவாய் மேட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றித் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசக்தி, பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், பழனி வனத்துறை அலுவலர் தலைமையிலான காவல் துறையினர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

மலைவாழ் மக்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. வனத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று பொருட்களை வழங்கியதால் மலைவாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி கொண்டாட்டம்

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.