ETV Bharat / state

நத்தம் கல்குவாரியை மூடக்கோரி  கறுப்பு தீபாவளி அனுசரிப்பு!

author img

By

Published : Oct 28, 2019, 7:27 AM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தீபாவளியைப் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

peoples demanding

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் கற்கள், தூசுகள் சிதறி குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து பலமுறை நத்தம் வட்டாசிரியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் தீபாவளியைப் புறக்கணித்து தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குவாரியை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

கல்குவாரியை மூடக் கோரி தீபாவளியை புறக்கணிக்கும் மக்கள்

மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்வரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தை கருப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்தப் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கிராம மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:காஞ்சிபுரம் கல்குவாரி குடோனில் வெடிவிபத்து- ஒருவர் மாயம், மற்றொருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் கற்கள், தூசுகள் சிதறி குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து பலமுறை நத்தம் வட்டாசிரியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் தீபாவளியைப் புறக்கணித்து தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி குவாரியை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

கல்குவாரியை மூடக் கோரி தீபாவளியை புறக்கணிக்கும் மக்கள்

மேலும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்வரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தை கருப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்தப் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும் கிராம மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:காஞ்சிபுரம் கல்குவாரி குடோனில் வெடிவிபத்து- ஒருவர் மாயம், மற்றொருவர் படுகாயம்

Intro:திண்டுக்கல் 27.10.19

நத்தம் அருகே கல்குவாரியில் மூட கோரி கிராம மக்கள் கருப்பு தீபாவளி அனுசரிப்பு.

Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிக்கு அருகிலேயே செங்குளம், தேவர்நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் விவசாயங்கள் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

குவாரிகளில் வெடி வைத்து தகர்ப்பதால் வீடுகளில் கல்கள், தூசிகள் சிதறி குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை நத்தம் தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தும் பல்வேறு சாலை மறியல் போராட்டங்கள் நடத்தியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தீபாவளியை புறக்கணித்து குவாரியை மூட சொல்லி கோஷங்கள் எழுப்பி குவாரிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தை கருப்பு தீபாவளியாக கடைப்பிடிக்க போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் இணைந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.