நத்தம் அருகே சுண்டைக்காய்பட்டி விலக்குப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் புதர் பகுதியில் இருந்த சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.