ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன - அமைச்சர் சேகர்பாபு

திண்டுக்கல் அருகே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.

author img

By

Published : Apr 9, 2022, 3:53 PM IST

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்புள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனைத்தொடர்ந்து கோயில்களில் குடமுழுக்கு மற்றும் பராமரிப்புப்பணிகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஏப். 09) ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கும், பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் என ரூ.100 கோடி நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

872 சிலைகள் மீட்பு: அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு, அத்துமால் கல் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பழனியில் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை மீட்டு தமிழ்நாடு அரசு சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் விரைவில் தமிழ்நாடு கொண்டுவரப்பட உள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பல கோயில்களில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் அனைவருக்கும் சமம். தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீதான அவதூறு வழக்கு ரத்து: நீதிமன்றம்'

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்புள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனைத்தொடர்ந்து கோயில்களில் குடமுழுக்கு மற்றும் பராமரிப்புப்பணிகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஏப். 09) ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கும், பராமரிப்புப் பணிகள் செய்வதற்கும் என ரூ.100 கோடி நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

872 சிலைகள் மீட்பு: அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு, அத்துமால் கல் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பழனியில் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை மீட்டு தமிழ்நாடு அரசு சாதனைப் படைத்துள்ளது. தமிழ்நாடு கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் விரைவில் தமிழ்நாடு கொண்டுவரப்பட உள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பல கோயில்களில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் அனைவருக்கும் சமம். தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீதான அவதூறு வழக்கு ரத்து: நீதிமன்றம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.