ETV Bharat / state

குதிரையாறு அணை தண்ணீர் திறப்பு எப்போது?

சென்னை: பாசனத்திற்காக குதிரையாறு அணையிலிருந்து நவ. 11ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

author img

By

Published : Nov 9, 2020, 8:36 PM IST

kuthiraiyar dam opening date
kuthiraiyar dam opening date

திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளினை ஏற்று குதிரையாறு அணையிலிருந்து இடது, வலது பிரதானக் கால்வாய், பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு நவம்பர் 11ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 10ஆம் தேதி வரை 120 நாள்கள் பாசனக் காலத்திற்குரிய இடைவெளியில் 90 நாள்களுக்கு, நாள் ஒன்றுக்கு 41 கன அடிக்கு மிகாமல் 228.10 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 5லட்சத்து 23 ஆயிரத்து 159 ஏக்கர் நிலம், திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலம் என மொத்தம் 6113.86 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈச்சம்பாடி அணைக்கட்டின் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளினை ஏற்று குதிரையாறு அணையிலிருந்து இடது, வலது பிரதானக் கால்வாய், பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு நவம்பர் 11ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 10ஆம் தேதி வரை 120 நாள்கள் பாசனக் காலத்திற்குரிய இடைவெளியில் 90 நாள்களுக்கு, நாள் ஒன்றுக்கு 41 கன அடிக்கு மிகாமல் 228.10 மில்லியன் கன அடி தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 5லட்சத்து 23 ஆயிரத்து 159 ஏக்கர் நிலம், திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலம் என மொத்தம் 6113.86 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈச்சம்பாடி அணைக்கட்டின் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.