ETV Bharat / state

25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட கோயில் காளை உயிரிழப்பு

author img

By

Published : Apr 26, 2019, 8:42 AM IST

திண்டுக்கல்: மேட்டு ராஜக்காப்பட்டி காளியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த கோயில் காளை உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காளை

திண்டுக்கல் மாவட்டம் மேட்டு ராஜக்காப்பட்டியில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுமக்கள் ஒன்றுச் சேர்ந்து 25 வருடங்களாக 'காளி' என்ற ஜல்லிக்கட்டு மாட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இந்த மாடு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை குவித்துள்ளது.

தாரை தப்பட்டை முழங்க இறந்த காளையின் உடலுக்கு மாலைகள் அணிவித்து அதனை அடக்கம் செய்தனர்

இந்த காளையானது போட்டிக்குச் செல்வதற்கு முன் கோயிலில் மண்டியிட்டு, தலைவணங்கி காளியம்மனை வணங்கிதான் செல்லும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு யாரிடமும் பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை வென்றது. இப்பகுதி கிராம மக்கள் இந்த காளையை சொந்த குழந்தையை போல் பாசத்துடன் வளர்த்துவந்தனர்.

இந்நிலையில் வயது முதிர்வாலும், உடல்நிலை குறைவாலும் நேற்று 'காளி' உயிர் பிரிந்தது. இதன் இழப்பு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள், வீரர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த காளையின் உடலுக்கு தாரை தப்பட்டை முழங்க, மாலைகள் அணிவித்து மரியாதை செய்து அதனை அடக்கம் செய்தனர். இந்த இறுதிச்சடங்கில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டு ராஜக்காப்பட்டியில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுமக்கள் ஒன்றுச் சேர்ந்து 25 வருடங்களாக 'காளி' என்ற ஜல்லிக்கட்டு மாட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். இந்த மாடு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளை குவித்துள்ளது.

தாரை தப்பட்டை முழங்க இறந்த காளையின் உடலுக்கு மாலைகள் அணிவித்து அதனை அடக்கம் செய்தனர்

இந்த காளையானது போட்டிக்குச் செல்வதற்கு முன் கோயிலில் மண்டியிட்டு, தலைவணங்கி காளியம்மனை வணங்கிதான் செல்லும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு யாரிடமும் பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை வென்றது. இப்பகுதி கிராம மக்கள் இந்த காளையை சொந்த குழந்தையை போல் பாசத்துடன் வளர்த்துவந்தனர்.

இந்நிலையில் வயது முதிர்வாலும், உடல்நிலை குறைவாலும் நேற்று 'காளி' உயிர் பிரிந்தது. இதன் இழப்பு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள், வீரர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த காளையின் உடலுக்கு தாரை தப்பட்டை முழங்க, மாலைகள் அணிவித்து மரியாதை செய்து அதனை அடக்கம் செய்தனர். இந்த இறுதிச்சடங்கில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் கோயிலுக்காக 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த கோவில் காலை மரணம் அடைந்ததால் அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

திண்டுக்கல் மேட்டுராஜக்காப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் அப்பகுதி பொதுமக்கள் 'காளி' என்ற ஜல்லிக்கட்டு மாட்டை செல்லமாக கடந்த 25 வருடங்களாக வளர்த்து வந்தார். இந்த மாடு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பல வெற்றிகளை குவித்தது. இந்த மாடு அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டு இருக்கும். எப்பொழுது போட்டிக்கு சென்றாலும் காளியம்மன் கோயில் முன் மண்டியிட்டு, தலைவணங்கி காளியம்மனை வணங்கிதான் செல்லும். கடந்த பொங்கல் பண்டிகையில் கூட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு யாரிடமும் சிக்காமல் பல்வேறு பரிசுகளை வென்றது.  இப்பகுதியில் இந்த மாட்டை தங்கள் வீட்டு குழந்தைகளைப் போல் அனைவரும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். 

இந்நிலையில் வயது முதிர்வு காரணத்தினாலும்,  உடல்நிலை குறைவாலும் நேற்று மதியம் ஜல்லிக்கட்டு காளை 'காளி' உயிர் பிரிந்தது. இதன் இழப்பு ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள், வீரர்கள் இடையே  மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இறுதி சடங்கு அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே மாட்டைக் குளிப்பாட்டி, மாலைகள் அணிவித்து, தாரை தப்பட்டை முழங்க அடக்கம் செய்தனர். இந்த இறுதிச்சடங்கில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.