ETV Bharat / state

நத்தத்தில் பழமை வாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில்

திண்டுக்கல் :நத்தம் மேட்டுப்பட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நத்தம் மேட்டுப்பட்டி
author img

By

Published : May 2, 2019, 11:51 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இந்த பழமை வாய்ந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா 29ஆம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 31ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. 1ஆம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது.

1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள்

இந்நிலையில், காசி, ராமேஷ்வரம், கங்கை, அழகர்கோயில் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்களை மேளதாளம் முழங்க கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருடன் வட்டமிட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இந்த பழமை வாய்ந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா 29ஆம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 31ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. 1ஆம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது.

1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள்

இந்நிலையில், காசி, ராமேஷ்வரம், கங்கை, அழகர்கோயில் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்களை மேளதாளம் முழங்க கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருடன் வட்டமிட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் 

நத்தம் மேட்டுபட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கதிர்நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலனாது 1000ம் ஆண்டு பழமை வாய்ந்த ஆகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் விழா  29ம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 31ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. 1ம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது.  

இதை தொடர்ந்து இன்று நான்காம் கால பூஜை நடைபெற்றது. தொடந்து  காசி, இராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் வைக்கப்பட்டிருந்தது. இப்புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து வேத மந்திரங்கள் முழங்கிய பொழுது கருடன் வட்டமிட்டதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.