ETV Bharat / state

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! - கன்னிவாடி பகுதியில் காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி
யானை தாக்கி உயிரிழந்த விவசாயி
author img

By

Published : Jan 6, 2020, 3:37 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஊருக்குள் யானை ஒன்று புகுந்துள்ளது.

அப்போது, தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன்(60) என்பவரை யானை தாக்கியுள்ளது . இதில், படுகாயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ஏழு யானைகள் கொண்ட குழு ஒன்று, நீலமலைக்கோட்டை முதல் கன்னிவாடி அணை வரை தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இந்த யானைகள் 300 தென்னை மரங்களை அழித்துள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி

இதனால் , பெரும் அச்சத்திலிருந்த பொதுமக்கள் இது குறித்து கடந்த ஒரு மாதகாலமாக வனத்துறை , மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைத்த அப்பகுதி மக்கள் பழனி- மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வழிவகுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: காரை விரட்டிய யானை: தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஊருக்குள் யானை ஒன்று புகுந்துள்ளது.

அப்போது, தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன்(60) என்பவரை யானை தாக்கியுள்ளது . இதில், படுகாயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ஏழு யானைகள் கொண்ட குழு ஒன்று, நீலமலைக்கோட்டை முதல் கன்னிவாடி அணை வரை தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இந்த யானைகள் 300 தென்னை மரங்களை அழித்துள்ளது.

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி

இதனால் , பெரும் அச்சத்திலிருந்த பொதுமக்கள் இது குறித்து கடந்த ஒரு மாதகாலமாக வனத்துறை , மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைத்த அப்பகுதி மக்கள் பழனி- மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நிரந்தர தீர்வு காண வழிவகுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: காரை விரட்டிய யானை: தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!

Intro:திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டி கோம்பையில் தோட்டத்தில் காட்டு யானை மிதித்து விவசாயி முருகன்- 60 சம்பவ இடத்திலேயே பலி. பிரேதத்தை மதுரை- பழனி சாலையில் போட்டு ஊர் பொதுமக்கள் போராட்டம்.
Body:திண்டுக்கல் 05.01.2020
ம.பூபதி செய்தியாளர்


பண்ணைப்பட்டி கோம்பையில் தோட்டத்தில் காட்டு யானை மிதித்து விவசாயி முருகன்- 60 சம்பவ இடத்திலேயே பலி. பிரேதத்தை மதுரை- பழனி சாலையில் போட்டு ஊர் பொதுமக்கள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து இறங்கி வந்த யானை அப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதே வேளையில் தனது சொந்தத் தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த முருகன்- 60 என்பவரை தோட்டத்திற்குள் புகுந்த யானை மிதித்தது . இதில் முகத்தில் படுகாயமடைந்த முருகன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். கடந்த ஒரு மாத காலமாக 7 யானைகள் கொண்ட ஒரு யானை குழு நீலமலைக்கோட்டை முதல் கன்னிவாடி டேம் வரை தொடர்ந்து யானைக் கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 300 தென்னை மரங்கள் இதுவரை யானைகளில் அழிக்கப்பட்டுள்ளது. அச்சத்தில் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத சூழ்நிலையில் தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைத்த பொதுமக்கள் பிரேதத்தை பழனி- மதுரை சாலையில் போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 கிலோமீட்டர் அளவிற்கு தற்போது போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட வனத்துறை அலுவலர் மாவட்ட ஆட்சியர் என சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிறந்தர தீர்வு காணவேண்டும் என மறியலில் ஈடுபட்டுள்ளனர்.Conclusion:திண்டுக்கல்
பண்ணைப்பட்டி கோம்பையில் தோட்டத்தில் காட்டு யானை மிதித்து விவசாயி முருகன்- 60 சம்பவ இடத்திலேயே பலி. பிரேதத்தை மதுரை- பழனி சாலையில் போட்டு ஊர் பொதுமக்கள் போராட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.