திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்றினால் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 28 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று கரோனா பாதித்த நான்கு வயது சிறுவன் உள்பட 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே குணமடைந்து வீடு திரும்புபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட இணை இயக்குநர் பூங்கோதை, மருத்துவக் கல்லூரி டீன் விஜயகுமார் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை பெற்ற காவல்துறை அலுவலரின் அனுபவம்!