சனி மற்றும் வியாழன் கோள்கள் டிசம்பர் 21ஆம் தேதியன்று ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன. இதுகுறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் எபினேசர் கூறுகையில், இந்த அரிய நிகழ்வினை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.
கோ ஜங்சன் என கூறப்படும் இந்த நிகழ்வு இதற்கு முன்பாக 1623ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி இது நடக்கிறது.
வியாழன், சனி கோள்கள் சந்தித்துகொள்ளும் போது நட்சத்திரத்தைப் போன்று தான் காட்சி தரும் கொஞ்சம் கூடுதலான வெளிச்சத்துடன் இந்த கோள்கள் கண்ணுக்கு தெரியும். பூமியிலிருந்து வியாழன் கோள் 884 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சனிகோள் 1613 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ள கோள்கள் நேர்கோட்டில் வருவது ஒரு அதிசய நிகழ்வாகும்.
பொதுமக்கள் இதனை காண்பதற்கு வசதியாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாலை 6 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இதுபோன்ற ஒரு நிகழ்வு 2418ஆம் ஆண்டுதான் நடக்கும்” என்றார்.
இதையும் படிங்க: சாதிக்கத் துடிக்கும் உணர்வு - இளம் விஞ்ஞானி வினிஷாவின் கண்டுபிடிப்புகள்