ETV Bharat / state

நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி காட்சி - Viral CCTV

திண்டுக்கல் அருகே கடைக்குள் புகுந்த திருடன், நீண்ட நேரம் தேடியும் பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான். சிசிடிவி பதிவுகள் மூலம் காவல்துறையினர் அவனை தேடி வருகின்றனர்.

நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி வெளியானது!
நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி வெளியானது!
author img

By

Published : Jul 23, 2022, 3:19 PM IST

திண்டுக்கல் நத்தம் சாலையில் ஸ்ரீராம் என்பவர் ரமணா என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல், கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக கடை உரிமையாளருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மர்ம நபர் ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்தபடி, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து, பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் தேடிக் கொண்டே இருந்ததுள்ளார். பின்னர் பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளது.

நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி வெளியானது!

இதே கடையில் ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இதேபோல் மேற்கூரையை உடைத்து பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பூண்டு மண்டியில் கொள்ளை.. தடயங்களை அழிக்க வைத்த நெருப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!

திண்டுக்கல் நத்தம் சாலையில் ஸ்ரீராம் என்பவர் ரமணா என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல், கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக கடை உரிமையாளருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மர்ம நபர் ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்தபடி, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்து, பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் தேடிக் கொண்டே இருந்ததுள்ளார். பின்னர் பணம் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளது.

நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் - சிசிடிவி வெளியானது!

இதே கடையில் ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இதேபோல் மேற்கூரையை உடைத்து பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பூண்டு மண்டியில் கொள்ளை.. தடயங்களை அழிக்க வைத்த நெருப்பு - சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.