ETV Bharat / state

வேன் மோதிய விபத்து - மனைவி கண் முன்னே கணவர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 8, 2021, 3:44 PM IST

திண்டுக்கல் கரூர் புறவழிச்சாலையில் வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் பொட்டியசெட்டியபட்டியைச் சேர்ந்தவர், பொன்ராஜ் (56). இவரது மனைவி செல்லம்மாள்.

இவர்கள் இருவரும் இன்று (அக்.08) காலை திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே அவர்களது பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பொன்ராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிலையில், வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பின்னால், இருந்த செல்லம்மாளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர், பொன்ராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கனமழையால் சரிந்த வீடு - ஏழு பேர் மரணம்

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் பொட்டியசெட்டியபட்டியைச் சேர்ந்தவர், பொன்ராஜ் (56). இவரது மனைவி செல்லம்மாள்.

இவர்கள் இருவரும் இன்று (அக்.08) காலை திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே அவர்களது பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பொன்ராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிலையில், வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பின்னால், இருந்த செல்லம்மாளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர், பொன்ராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கனமழையால் சரிந்த வீடு - ஏழு பேர் மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.