ETV Bharat / state

தர்மபுரியில் வைக்கோலுக்கிடையே எரிந்து கிடந்த பெண்ணின் உடல் மீட்பு!

தர்மபுரி : வைக்கோலுக்கிடையே பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Apr 30, 2021, 10:31 PM IST

தர்மபுரியில் வைக்கோலுக்கிடையே எரிந்து கிடந்த பெண்ணின் உடல் மீட்பு!
தர்மபுரியில் வைக்கோலுக்கிடையே எரிந்து கிடந்த பெண்ணின் உடல் மீட்பு!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (33). லட்சுமி கோவையில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு முருகன் மது போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு இரண்டு மணி அளவில் வீட்டிற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.

அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துவிட்டு லட்சுமியை தேடியுள்ளனர். ஆனால் காலை வரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அதிகாலையில் லட்சுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், லட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமியின் கணவர் உட்பட மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' - ஓபிஎஸ், இபிஎஸ்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (33). லட்சுமி கோவையில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு முருகன் மது போதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இரவு இரண்டு மணி அளவில் வீட்டிற்கு அருகே இருந்த வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.

அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துவிட்டு லட்சுமியை தேடியுள்ளனர். ஆனால் காலை வரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அதிகாலையில் லட்சுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், லட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமியின் கணவர் உட்பட மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' - ஓபிஎஸ், இபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.