ETV Bharat / state

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குடிநீர் பிரச்னை இங்கில்லை..! - முன்னெச்சரிக்கையால் குடிநீர் பிரச்சனை இங்கில்லை

தருமபுரி: குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், மாவட்டத்தில் தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குடிநீர் பிரச்னை இங்கில்லை
author img

By

Published : Jun 26, 2019, 9:13 PM IST

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ் பாபு இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அலுவலர்களின் செயல்பாடுகளைக் கேட்ட பின்னர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுத் துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு, ‘பருவமழை குறைவு காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களிலும் உள்ளது. முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களைக் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ததில் மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகள் மழை குறைவு காரணமாகக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முன்பே கணித்து, குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் இங்குக் குடிநீர் பிரச்சனை குறைவாக உள்ளது.

.குடிநீர் பிரச்னையை தீர்க்க 1500க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சப்பள்ளி பகுதியில் அணை நீர்மட்டம் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு பாலக்கோடு பகுதிக்குத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பாலக்கோடு பகுதியில் 3 கோடி மதிப்பில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு முதலமைச்சருக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ் பாபு இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அலுவலர்களின் செயல்பாடுகளைக் கேட்ட பின்னர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுத் துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு, ‘பருவமழை குறைவு காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களிலும் உள்ளது. முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களைக் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ததில் மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகள் மழை குறைவு காரணமாகக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முன்பே கணித்து, குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் இங்குக் குடிநீர் பிரச்சனை குறைவாக உள்ளது.

.குடிநீர் பிரச்னையை தீர்க்க 1500க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சப்பள்ளி பகுதியில் அணை நீர்மட்டம் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு பாலக்கோடு பகுதிக்குத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பாலக்கோடு பகுதியில் 3 கோடி மதிப்பில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு முதலமைச்சருக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Intro:TN_DPI_01_26_GOVT SECRETARI REVIEW MEET_VIS_BYTE_7204444


Body:TN_DPI_01_26_GOVT SECRETARI REVIEW MEET_VIS_BYTE_7204444


Conclusion:தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் மாவட்டத்தில் தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படுவதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு பேட்டி. தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் எவ்வாறு வினியோகிக்கப்படுகிறது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்க படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ் பாபு இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு அலுவலர்களின் செயல்பாடுகள் செயல்பாடுகளை கேட்டறிந்தார் . அரசு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி கேட்டறிந்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வு கூட்டத்தில். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி.ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்‌மாவட்ட வருவாய் அலுவலர் ‌ நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்த அரசுத் துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு. பருவமழை குறைவு காரணமாக தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களிலும் உள்ளது. தமிழக முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அரசின் திட்டங்கள் எவ்வாறு பொதுமக்களிடம் சென்று சேர்கிறது. மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள்மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களை கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ததில் மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகள் மழை குறைவு காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முன்பே கணித்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அதன் காரணமாக  குடிநீர் பிரச்சனை குறைவாக உள்ளது. பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையை வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவை ஏற்படாமல் உள்ளது.ஒரு சில இடங்களை மட்டும் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்றும் மாவட்டம் முழுவதும் சராசரியாக அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.குடிநீர் பிரச்சினையை தீர்க்க 1500க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பஞ்சப்பள்ளி பகுதியில் அணை நீர்மட்டம் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை கொண்டு பாலக்கோடு பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பாலக்கோடு பகுதியில் 3 கோடி மதிப்பில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு முதல்வருக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதி கிடைத்தவுடன்  பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் மூலம் குடிரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தருமபுரி சார் ஆட்சியர் சிவனருள் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.