ETV Bharat / state

"இனியும் குடிநீர் பிரச்னை வராது" அமைச்சர் அன்பழகன் உறுதி

author img

By

Published : Aug 13, 2019, 8:53 PM IST

தர்மபுரி: நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

"இனி குடிநீர் பிரச்சனை வராது" அமைச்சர் அன்பழகன் பேட்டி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தவிர்த்து அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் அன்பழகன்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 3லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரானது செந்நிறமாகவும், தூசுகள் கலந்தும் வருவதால் அதனை சுத்திகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக தண்ணீர் வரத்து காரணமாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், மீண்டும் சுத்திகரித்து வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி அலுவலர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் அன்பழகன், ஒகேனக்கல் , குடிநீர் பிரச்சனை
குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தவிர்த்து அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் அன்பழகன்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 3லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரானது செந்நிறமாகவும், தூசுகள் கலந்தும் வருவதால் அதனை சுத்திகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக தண்ணீர் வரத்து காரணமாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், மீண்டும் சுத்திகரித்து வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி அலுவலர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் அன்பழகன், ஒகேனக்கல் , குடிநீர் பிரச்சனை
குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Intro:tn_dpi_01_hoganakkalwater_mini_pressmeet_vis_7204444


Body:tn_dpi_01_hoganakkalwater_mini_pressmeet_vis_7204444


Conclusion:

தண்ணீர் வரத்து காரணமாக தடைபட்டிருந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு விரைவில் தொடங்கி பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்படும் தமிழக உயர்கல்வித்துறை கேபி அன்பழகன் பேட்டி.  கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதிக அளவு தண்ணீர் வராததால் தண்ணீரில் அதிக அளவு  சேரும் சகதியுமாக வந்ததால் அவற்றை சுத்திகரிக்க முடியாத காரணத்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் உறிஞ்சப்படுவது கடந்த நான்கு நாட்கள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தண்ணீர் எடுப்பதை நிறுத்தி வைக்கப்பட்டதால் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு குடி தண்ணீர் வினியோகம்பாதிக்கப் படும் சூழ்நிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன்  தலைமையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்.நகராட்சி பேரூராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டும் நம்பாமல் ஆங்காங்கு உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது அவற்றை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்குவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் தண்ணீரை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் எடுக்கும் பகுதியில் தண்ணீர் சென்நிறமாகவும் (செம்மண்நிறம்) நிறமாகவும். தண்ணீரில் அதிக அளவு தூசு துகள்கள் அதிகமாக இருந்ததால் தண்ணீர் சுத்திகரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் இன்று மாலை முதல் தண்ணீர் எடுக்கும் பணி நடைபெறும் என்றும் குடிநீர் பற்றாக்குறை மாவட்ட மக்களுக்கு ஏற்படாதவண்ணம் ஒகேனக்கல் தண்ணீர் இரண்டு நாட்கள் வழங்கவில்லை என்றாலும் எந்த பகுதியில் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதை ஆய்வு செய்து பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் அந்தந்த பகுதி அலுவலர்கள் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்ட மக்கள் குடிநீர் தண்ணீர் பிரச்சினைக்கு ஆளாகாமல் தண்ணீர் பிரச்சனை இயலாதவாறு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.ஒகேனக்கல் பகுதியில் இருந்து நீர் ஏற்றுதிட்டத்தின்  மூலம் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திட்டத்தை செயல் படுத்த படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.