ETV Bharat / state

'பண்டிகைக் கயிறையா கையில் கட்டுற?' - மாணவர்களை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்! - dharmapuri teachers hitted students

தருமபுரி: விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தரப்படும், கயிறுகளை கையில் கட்டி வந்த பள்ளி மாணவர்களை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்
author img

By

Published : Sep 4, 2019, 10:00 PM IST

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் பாகல்பட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறுகளை தங்கள் கைகளில் கட்டி பள்ளிக்குச் சென்றுள்ளனர். கைகளில் மஞ்சள் நிற கயிறு கட்டி வந்த மாணவர்களை, அப்பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்திலேயே பள்ளி ஆசிரியர்கள் காவேரி, ஜெயவேலன் கடுமையாக அடித்துள்ளனர்.

பள்ளி முடிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், ஆசியர்கள் அடித்ததை தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தாக்குதலால் காயம்பட்ட எட்டாம் வகுப்பு படிக்கும் கிரிஷாந்த், ஒன்பதாம் மாணவர்களான பிரதாப், சத்திய சுந்தரம் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை தருமபுரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான பாஸ்கர் பார்வையிட்டு நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவனையில் அனுமதி

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கர் பேசும்போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறு கட்டி வந்ததற்கு அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆசிரியர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் காரணமாக இந்து கடவுள்களை வணங்கும் மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்திய ஆசிரியர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் பாகல்பட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறுகளை தங்கள் கைகளில் கட்டி பள்ளிக்குச் சென்றுள்ளனர். கைகளில் மஞ்சள் நிற கயிறு கட்டி வந்த மாணவர்களை, அப்பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்திலேயே பள்ளி ஆசிரியர்கள் காவேரி, ஜெயவேலன் கடுமையாக அடித்துள்ளனர்.

பள்ளி முடிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், ஆசியர்கள் அடித்ததை தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தாக்குதலால் காயம்பட்ட எட்டாம் வகுப்பு படிக்கும் கிரிஷாந்த், ஒன்பதாம் மாணவர்களான பிரதாப், சத்திய சுந்தரம் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை தருமபுரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான பாஸ்கர் பார்வையிட்டு நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவனையில் அனுமதி

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கர் பேசும்போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறு கட்டி வந்ததற்கு அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆசிரியர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் காரணமாக இந்து கடவுள்களை வணங்கும் மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்திய ஆசிரியர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:tn_dpi_01_school_student_gh_admit_vis_7204444


Body:tn_dpi_01_school_student_gh_admit_vis_7204444


Conclusion:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறு கட்டி வந்த பள்ளி மாணவர்கள் மீது ஆசிரியர்கள்  சரமாரி தாக்குதல் காயம்பட்ட மாணவர்கள் 

 தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை.       தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த பாகல்பட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை  கயிறுகளை தங்கள் கைகளில் கட்டி பள்ளிக்கு வந்துள்ளனர். கைகளில் மஞ்சள் நிற கயிறு கட்டி வந்த மாணவர்களை அப்பள்ளியின் இறைவணக்க கூட்டத்திலேயே பள்ளி ஆசிரியர்கள் காவேரி மற்றும் ஜெய வேலன் கடுமையாக தாக்கியுள்ளனர். நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசியர்கள் தாக்கியதை தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தாக்குதலால் காயம்பட்ட எட்டாம் வகுப்பு படிக்கும் கிரிஷாந்த் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிரதாப் மற்றும் சத்திய சுந்தரம் இவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் பார்வையிட்டு நடந்த விவரங்களைக் கேட்டார். செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் பேசும்போது. அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறு கட்டி வந்ததற்கு அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆசிரியர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் அதன் காரணமாக இந்து கடவுள்களை வணங்கும் மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்திய ஆசிரியர்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்யவேண்டும் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


பேட்டி.. பாஸ்கர் தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.