ETV Bharat / state

ஆக்கிரமித்து கட்டப்பட்ட நிறுவனங்களுக்கு வருவாய்த் துறை சீல்! - Revenue dept Seal for Occupied Companies in dharumapuri

தருமபுரி: அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரோட்டரி சங்க திருமண மண்டபம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

Revenue dept Seal
Revenue dept Seal
author img

By

Published : Dec 25, 2019, 2:36 PM IST

தருமபுரி நான்கு ரோடு அருகே வட்டார வளர்ச்சி காலனி, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் காலியிடங்கள் இருந்தன. வட்டார வளர்ச்சி காலனியில் வசித்துவந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன் வீடுகளைக் காலி செய்தனர். இந்த காலனி அருகே இருந்த அரசு தொடக்கப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 895 சதுர மீட்டர் இடத்தை தருமபுரி ரோட்டரி நிர்வாகிகள் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனர்.

Revenue dept Seal
Revenue dept Seal

அதைத் தொடர்ந்து பள்ளி செயல்பட்ட கட்டடத்தை இலவச தையல் பயிற்சி மையமாகவும், காலியிடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன், வட்டார வளர்ச்சி காலனியில் இருந்த அரசு குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு, இடத்தின் மொத்த பரப்பளவு கணக்கெடுக்கப்பட்டது. அதில், 895 சதுர மீட்டர் நிலத்தை ரோட்டரி சங்கத்தின் பேரில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை காலி செய்யும்படி ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

Revenue dept Seal

ஆனால் இடத்தை காலி செய்யாததால், அங்கு கட்டப்பட்ட தையல் பயிற்சி மையம், திருமண மண்டபத்துக்கு தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், பி.டி.ஓ., ஆறுமுகம் ஆகியோர் நேற்று (டிச. 24) இரவு சீல் வைத்தனர். பல ஆண்டுகளாக ரோட்டரி சங்கம் ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 20 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

தருமபுரி நான்கு ரோடு அருகே வட்டார வளர்ச்சி காலனி, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் காலியிடங்கள் இருந்தன. வட்டார வளர்ச்சி காலனியில் வசித்துவந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன் வீடுகளைக் காலி செய்தனர். இந்த காலனி அருகே இருந்த அரசு தொடக்கப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 895 சதுர மீட்டர் இடத்தை தருமபுரி ரோட்டரி நிர்வாகிகள் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனர்.

Revenue dept Seal
Revenue dept Seal

அதைத் தொடர்ந்து பள்ளி செயல்பட்ட கட்டடத்தை இலவச தையல் பயிற்சி மையமாகவும், காலியிடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன், வட்டார வளர்ச்சி காலனியில் இருந்த அரசு குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு, இடத்தின் மொத்த பரப்பளவு கணக்கெடுக்கப்பட்டது. அதில், 895 சதுர மீட்டர் நிலத்தை ரோட்டரி சங்கத்தின் பேரில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை காலி செய்யும்படி ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

Revenue dept Seal

ஆனால் இடத்தை காலி செய்யாததால், அங்கு கட்டப்பட்ட தையல் பயிற்சி மையம், திருமண மண்டபத்துக்கு தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், பி.டி.ஓ., ஆறுமுகம் ஆகியோர் நேற்று (டிச. 24) இரவு சீல் வைத்தனர். பல ஆண்டுகளாக ரோட்டரி சங்கம் ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 20 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:தருமபுரியில் அரசுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரோட்டரி சங்க கட்டடங்களுக்கு, வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.Body:தருமபுரியில் அரசுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரோட்டரி சங்க கட்டடங்களுக்கு, வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.Conclusion:தருமபுரியில் அரசுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ரோட்டரி சங்க கட்டடங்களுக்கு, வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
தருமபுரி, நான்கு ரோடு அருகே வட்டார வளர்ச்சி காலனி, அரசு துவக்கப்பள்ளி மற்றும் காலியிடங்கள் இருந்துள்ளன. வட்டார வளர்ச்சி காலனியில் இருந்த கட்டங்களை, அதிகாரிகள் தொடர்ந்து பராமரிக்காததை அடுத்து, இங்கு குடியிருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளை, பல ஆண்டுகளுக்கு முன், காலி செய்தனர். இக்காலனி அருகே இருந்த, அரசு துவக்கப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் 895 சதுர மீட்டர் இடத்தை, தருமபுரி ரோட்டரி நிர்வாகிகள் முறைகேடாக, தங்களுக்கு பத்திர பதிவு செய்துள்ளனர்.
அதை தொடர்ந்து பள்ளி செயல்பட்ட கட்டத்தை இலவச தையல் பயிற்சி மையமாகவும், காலியிடத்தில், திருமண மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், வட்டார வளர்ச்சி காலனியில் இருந்த அரசு குடியிருப்புக்கள் இடித்து அகற்றப்பட்டதுடன், இவ்விடத்தின் மொத்த பரப்பு கணக்கெடுக்கப்பட்டது.
இதில், சர்வே எண், 97 ல், 100ல் 895 சதுர மீட்டர் நிலத்தை ரோட்டரி சங்கத்தின் பேரில் முறைகேடகா பத்திர பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இவ்விடத்தை காலி செய்யும் படி, மாவட்ட நிர்வாகம், ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் இடத்தை காலி செய்யாததை அடுத்து, இன்று இரவு (24ம் தேதி), தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், பி.டி.ஓ., ஆறுமுகம் ஆகியோர், இன்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் காவல்துறையினருடன், சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள தையல் பயிற்சி மையம், திருமண மண்டபத்துக்கு சீல் வைத்தனர்.
பல ஆண்டுகளாக ரோட்டரி சங்கம் ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.