ETV Bharat / state

செம்மரம் சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற விஏஓ!

தருமபுரி: அரூர் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் செம்மரம் சாகுபடி செய்து அசத்தி வருகிறார், குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 13, 2019, 9:51 AM IST

dharmapuri
dharmapuri

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் செம்மரம் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், சுமார் 2 ஏக்கரில் செம்மரம் வளர்த்து வருகிறேன். செம்மரங்களை தனியாரும் வளர்க்கலாம் என 2002ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் பிறகு, 2012ஆம் ஆண்டு திருச்சி துறையூர் விவசாய பயிர் வளர்ப்பு துறையின் உதவியுடன் ஆந்திராவில் விளையும் செம்மர வகையைச் சார்ந்த 800 மரக்கன்றுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயிரிட்டேன். செம்மரங்களை பயிரிட்டு ஏழாண்டுகள் ஆகிறது. மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இன்னும் எட்டாண்டுகளில் மரம் வெட்டும் பருவத்திற்கு வந்துவிடும்.

செம்மரம் சாகுபடி

அப்போது மரம் ஒன்றை ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யலாம். செம்மரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் தனி மார்க்கெட் உண்டு, ஒரு டன் எண்ணெய் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை விற்பனையாகும். இரண்டு ஏக்கர் செம்மரம் சாகுபடி செய்தால் 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ரூ.2 கோடி ரூபாய் லாபம் ஈட்டலாம். செம்மரம் வளா்த்தால் செழிப்பாகலாம்" என்றார்.

இதையுமம் படிங்க: ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 6 பேர் கைது!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் செம்மரம் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், சுமார் 2 ஏக்கரில் செம்மரம் வளர்த்து வருகிறேன். செம்மரங்களை தனியாரும் வளர்க்கலாம் என 2002ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் பிறகு, 2012ஆம் ஆண்டு திருச்சி துறையூர் விவசாய பயிர் வளர்ப்பு துறையின் உதவியுடன் ஆந்திராவில் விளையும் செம்மர வகையைச் சார்ந்த 800 மரக்கன்றுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயிரிட்டேன். செம்மரங்களை பயிரிட்டு ஏழாண்டுகள் ஆகிறது. மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இன்னும் எட்டாண்டுகளில் மரம் வெட்டும் பருவத்திற்கு வந்துவிடும்.

செம்மரம் சாகுபடி

அப்போது மரம் ஒன்றை ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யலாம். செம்மரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும் தனி மார்க்கெட் உண்டு, ஒரு டன் எண்ணெய் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை விற்பனையாகும். இரண்டு ஏக்கர் செம்மரம் சாகுபடி செய்தால் 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ரூ.2 கோடி ரூபாய் லாபம் ஈட்டலாம். செம்மரம் வளா்த்தால் செழிப்பாகலாம்" என்றார்.

இதையுமம் படிங்க: ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 6 பேர் கைது!

Intro: தருமபுரி அருகே செம்மரம் சாகுபடி செய்யும் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலா் .Body: தருமபுரி அருகே செம்மரம் சாகுபடி செய்யும் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலா் .Conclusion: தருமபுரி அருகே செம்மரம் சாகுபடி செய்யும் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலா் .



தருமபுரி மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் .மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவு சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் நெல்.கேள்வரகு.சாமை பயிரிடுகின்றனா். சில விவசாயிகள் தேக்கு மரம் வளர்பதில் ஆா்வம் காட்டிவருகின்றனா். அரூர் பகுதியில் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் செம்மரம் பயிரிட்டுள்ளார்.

செம்மரம் தனியாரும் வளர்க்க 2002 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு பலர் தமிழகத்தில் பயிரிட்டு வருகின்றனர். செம்மரம் ஒருமுறை பயிரிட்டால் 15 வருடங்களுக்கு பிறகு நன்கு வளர்ந்த ஓரளவு கனமாக தோற்றம் அளிக்கும் போது வெட்டப்படும். இந்த மரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு டன் செம்மரம் ரூ.10 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


செம்மரம் வளா்க்கும் முன்னாள் கிராமநிர்வாக அலுவலா் யுவராஜ் பேசும் போது.


தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 2 ஏக்கரில் செம்மரம் வளர்த்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு தனியாரும் செம்மரம் பயிரிடலாம் என அரசு அறிவித்த பிறகு, பல வருடங்கள் கழித்து கடந்த 2012-ம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள வனத்துறை சார்பில் விவசாய பயிர் வளர்ப்பு துறையை அனுகி ஆந்திராவில் விளையும் செம்மர வகையைச் சார்ந்த 800 மரக்கன்றுகள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயிரிட்டுள்ளர். தோட்டத்தில் பயிரிட்டு செம்மரம் வளர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது.

இன்னும் எட்டு ஆண்டுகள் கழித்து மரம் வெட்டும் பருவத்திற்கு வந்துவிடும். இந்தப் பயிருக்கு மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் செம்மரம் 15ஆண்டுகளில் மரம் ஒன்று 25ஆயிரம் வரை விற்பனையாகும். என்றும் செம்மரங்களில் இருந்து வரும் எண்ணெய் 1லட்சத்து25ஆயிரம் வரை விற்பனையாகிறது. இரண்டு ஏக்கர் செம்மரம் சாகுபடி செய்தால் 15 ஆண்டுகளில் 2கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.செம்மரம் வளா்த்தால் செழிப்பாகலாம் என்று உறுதியாக சொல்கிறார் யுவராஜ்.


பேட்டி,

01.யுவராஜ், விவசாயி எச்.தொப்பம்பட்டி,

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.