ETV Bharat / state

குடிநீர் பஞ்சத்தால் மக்கள் இடையே சண்டை!

author img

By

Published : Jun 15, 2019, 10:42 PM IST

தருமபுரி: ஆங்காங்கே நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையால், நகராட்சி குறைந்த அளவில் தண்ணீரை விநியோகம் செய்துவருவது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் பஞ்சத்தால் மக்கள் இடையே சண்டை!

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று நகராட்சி விநியோகம் செய்கிறது.

அந்தவகையில், நகராட்சிக்கு உட்பட்ட 32ஆவது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அப்போது, ஒரு பகுதி மக்கள் மட்டும் தண்ணீரை முழுவதுமாக பிடித்துக்கொள்வதாகவும், மற்றொரு பிரிவு மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Public fighting due to water probe in dharmapuri
தீத்தி அப்பாவு தெரு மக்கள் வாக்குவாதத்தின்போது

இதனால், இரு தெரு மக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டு தெருக்களின் மக்களும் பயனடையும் வகையில், பெரிய அளவிலான வால்வை அமைத்து ஒவ்வொரு தெருவிற்கும் ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று நகராட்சி விநியோகம் செய்கிறது.

அந்தவகையில், நகராட்சிக்கு உட்பட்ட 32ஆவது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அப்போது, ஒரு பகுதி மக்கள் மட்டும் தண்ணீரை முழுவதுமாக பிடித்துக்கொள்வதாகவும், மற்றொரு பிரிவு மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Public fighting due to water probe in dharmapuri
தீத்தி அப்பாவு தெரு மக்கள் வாக்குவாதத்தின்போது

இதனால், இரு தெரு மக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டு தெருக்களின் மக்களும் பயனடையும் வகையில், பெரிய அளவிலான வால்வை அமைத்து ஒவ்வொரு தெருவிற்கும் ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:TN_DPI_01_15_WATTER PROBLEM_IMG _7204444.jpgBody:TN_DPI_01_15_WATTER PROBLEM_IMG _7204444.jpgConclusion:தருமபுரி நகராட்சி பகுதியில் பொது மக்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்கும் நகராட்சி பணியாளர்கள். தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரை பெற்று நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது.தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதியில் நகராட்சி குடிநீர் முறையாக அனைத்து வீடுகளுக்கும் வினியோகம் குடிநீர் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.தீத்தி அப்பாவு தெருவுக்கு வரக்கூடிய பிரதானக் குழாயில் வால்வு அமைத்து தண்ணீர் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.நகராட்சி பணியாளர்கள் சாதாரண வாழ்வு ஒன்றை அமைத்து விட்டு அதனை பொதுமக்களை திருப்பிக்கொள்ளும் வகையில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் இப்பகுதிகளுக்கு விடுகின்றனர். இதில் ஒரு பகுதி மக்கள் மட்டும் தண்ணீர் விடக்கூடிய மூன்று மணி நேரமும் தண்ணீரை பிடித்துக்கொள்கின்றனர். மற்றொரு பகுதி மக்களுக்கு தண்ணீர் வருவதில்லை. தண்ணீர் கிடைக்கப் பெறாத மக்கள் வால்வு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு காவல் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். இதன் காரணமாக இரண்டு தெரு மக்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. எனவே நகராட்சி பணியாளர்கள் இந்த இரண்டு தெருமக்கள் பயன்படும் வகையில் பெரிய அளவிலான வால்வு அமைத்து ஒவ்வொரு தெருவிற்கும் ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.