சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் சினிமாவைத் தாண்டி சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் தனது கருத்தை அவ்வப்போது முன் வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (பிப்.15) அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவனின் பதிவை பகிர்ந்து தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதிய ரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.
மேலும் “கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா? தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (பிப்.16) நடந்த தலித் சுப்பையா குறித்த ஆவணப்பட வெளியீட்டில் இவற்றை குறித்து பா. ரஞ்சித் விரிவாக பேசியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசியதாவது, “சாதியைப் பற்றி பேசுவதாலேயே நமக்கு சாதி முத்திரை குத்தப்படும் இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இவனுக்கு வேற வேலையே இல்லை என சொல்லப்படும் இடத்தில்தான் இருக்கிறோம்.
அப்படி சொல்வதின் மூலம் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாங்கள் பேசுவோம். எங்களுக்கான மேடைகளை நாங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். தலித் சுப்பையா ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராக சம்பவம் செய்தவர். கடந்த நான்கு நாட்கலில் தலித்துகளுக்கு எதிராக அவ்வளவு பிரச்சனைகள் நடந்துள்ளது.
ஒரு உண்மைக்கு நிகரா ஒரு உண்மை இங்கு கிடையவே கிடையாது. உண்மைக்கு நிகராக ஒரு பொய்யை உருவாக்குகிறார்கள். அதை சமூக வலைதளங்களில் பேசி இப்படிப்பட்ட ஒரு விஷயமே நடக்கவில்லை என்று ஒரு மாற்றுக் கருத்தை உருவாக்குகிறார்கள். முதலில் பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை நாம் ஏன் விரும்புகிறோம். சும்மா இதனை கூறவில்லை.
ஏற்கனவே இருக்கிற ஆட்சி சமூக நீதிக்கு எதிரான ஆட்சியாக இருப்பதால் புதிய ஆட்சியை விரும்புகிறோம். சமூக நீதியைக் கோரக்கூடிய ஆட்சியை வேண்டுகிறோம். அப்படி ஒரு சமூக நீதி ஆட்சி வந்ததிற்கு பிறகு சாதிய தீண்டாமைகளோ, சமத்துவத்துக்கு எதிரான சம்பவங்களோ அதிகமாக இருக்கிறதென்றால் அது தொடர்பாக கேள்வியை கேட்க முதலில் நீங்கள் உரிமையை தர வேண்டும். கேள்வி கேட்பவரை எதிரிகளாக மாற்றக்கூடாது. கேள்விகளை தவறானதாக மாற்றுவது. நான் கேள்வி கேட்டவுடன் அமெரிக்காவிற்கு சென்றதை தொடர்புபடுத்துகிறார்கள்.
சாதியைப் பற்றி பேசுவதாலேயே நமக்கு சாதி முத்திரை குத்தப்படும் இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இவனுக்கு வேற வேலையே இல்லை என சொல்லப்படும் இடத்தில்தான் இருக்கிறோம். அப்படி சொல்வதின் மூலம் அவர்களின் வேண்டுகோள் என்னவென்றால் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் இருக்க முடியாது. நாங்கள் பேசுவோம்.
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது… https://t.co/t4Bruzfhal
— pa.ranjith (@beemji) February 15, 2025
எங்களுக்கான மேடைகளை நாங்களே உருவாக்கிக் கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். தலித் சுப்பையா ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராக சம்பவம் செய்தவர். இங்கிருக்கும் பிரச்சனையை புரிந்துகொள்ள வேண்டும்.எனக்கு 42 வயசு ஆகுது. நான் ஏன் தொடர்ந்து சாதிய பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன்.அது போன்ற சம்பவங்களை தொடர்ந்து கேட்டு வருவதால் தினமும் தலை எவ்வளவு வலிக்கும் என யாராவது யோசித்திருக்கிறீர்களா.
அந்த யோசனையில் இருந்து ஒரு கோபம் வருகிறது. அந்த கோபத்தைக் கூட உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீ எனக்கு என்ன விடுதலையை வாங்கி தந்துவிட முடியும். அப்போது எனக்கான விடுதலையை நான் கோருவேன்.எனக்கான விடுதலையை நான் பெற வேண்டிய காலகட்டம்.
இதுக்கு பின்னாடி அவன் இருக்கிறான் என என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் சாதிய பிரச்சனைகள் இயல்பாக இருக்கிறது. இதனை மாற்றுவதற்கு என்ன திட்டம் இருக்கிறது. ஆக்கபூர்வமான யோசனைகளை நோக்கி நகர வேண்டும். ஒரு பிரச்சனை நடந்தவுடன் அரசு சாதியால் நடக்கவில்லை என கருத்தை கட்டமைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
புல்லட்டில் சென்றதால் இளைஞனின் கையை வெட்டியதை உடனே சாதியால் இந்த பிரச்சனை நடக்கவில்லை என சமூக வலைதளங்களில் அரசு கருத்துகளை உருவாக்குகிறது. இதேதான் வேங்கைவயலிலும் நடந்தது. வேங்கைவயல் பிரச்சனை நடுவர் மன்றத்திற்கு சென்றுவிட்டது. அங்கு தீர்ப்பு கொடுப்பதற்குள் சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே தீர்ப்பு எழுதப்படுகிறது.
இந்த கருத்தை தொடர்ந்து உருவாக்குகிறார்கள். இதனை எப்படி நாம் கையாளப்போகிறோம். அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதை தவறு என நினைப்பதே முதலில் தவறு. இதற்கு முன் இருந்த ஆட்சி மாற வேண்டும் என எல்லோரும் நினைத்து உருவானதுதான் இந்த ஆட்சி. அப்படி இருக்கும்போது அரசிற்கு எதிராக கேள்வி கேட்டாலே அவர்களுக்கு ஒரு பெயரை கொடுப்பது ஆரோக்கியமான விஷ்யம் இல்லை.
இதையெல்லாம் இப்போதைய இளைஞர்கள் பரிந்துகொள்ள வேண்டும். தலித் சுப்பையா போன்ற ஆளுமைகள் அப்போது பேசியதைவிட இப்போது அதிகமாக நடக்கிறது. கடந்த நான்கு நாட்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவிற்கு பிரச்சனைகள் நடக்கின்றன. தேனியில் ஒரு மாணவன் இறந்துள்ளான். அதற்கான பதில் எதுவும் இல்லை. உடலை வாங்காமல் அங்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நரிக்குறவர் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சிவகார்த்திகேயன்... பிறந்தநாளை முன்னிட்டு சாமி தரிசனம்
இதை எப்படி கட்டுப்படுத்தப் போகிறோம். தலித்துகள் மட்டுமல்லாமல் தலித் அல்லாதவர்களும் ஒருங்கிணைந்தால் இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போதும் இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என கேட்கிறார்கள். படங்களில், பாடல்களில் ஏன் சாதிய அடையாளத்தை காட்டுகிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். எல்லா ஆட்சியிலும் பிரச்சனைகள் இருந்தது.
இந்த ஆட்சியிலும் பிரச்சனை இருந்தது என்றால் எதற்கு இந்த ஆட்சி. சமூக நீதியை நம்பக்கூடிய அரசாக இருக்கும்பட்சத்தில் தலித்துகளின் மீதான வன்முறையை நிறுத்துவதற்கு என்ன திட்டம் இருக்கிறது. வரும் தேர்தலில் பாஜக ஊர்ஹ்தெருவில் ஜெயிக்கலாம் ஆனால் காலனித்தெருவில் வெற்றி அடையாது. ஏனென்றால் ஆர் எஸ் எஸின் அடிப்படை எதிரியே அம்பேத்கரின் கருத்துகள்தான்.
இங்கிருக்கும் சதியத்திற்கும் இந்துவத்திற்கும் பார்ப்பனியத்திற்கு எதிராக அடிப்படையான வேலை இருக்கிறது. மற்ற தோழர்களிடம் இருக்கிறது. பெரியார் படிப்பகங்கலை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இங்கு தொடர்ந்து அநீதிகள் நடந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் நான் பேசிக்கொண்டேதான் இருக்க முடியும். இதனை புரிந்துகொள்ள வேண்டிய இடத்தில் எல்லோரும் இருக்கிறோம்.
இதனைதான் கலை வழியாக சினிமா வழியாக பேசுகிறோம்,. இந்த கருத்துகளை புரிந்துகொண்ட தலித்தல்லாதவர்கள் எங்களுடன் இணைந்து வேலை செய்கிறார்கள். இந்த கருத்துகளுக்கு எதிராகவும் முரண்பாடாகவும் இருக்கக்கூடிய அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்க்லு வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். தலித் சுப்பையா போன்ற பல கலைஞர்கள் அவர்கள் வாழும்போதே மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” என விரிவாக பேசினார்