ETV Bharat / state

உரிமை கோரப்படாத 9 சடலங்கள் ...தன்னார்வலர்கள் மூலம் நல்லடக்கம்

author img

By

Published : Aug 19, 2022, 10:48 AM IST

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 சடலங்களை தன்னார்வலர்கள் மூலம் காவல்துறையினர் நல்லடக்கம் செய்தனர்.

Etv Bharatஉரிமை கோரப்படாத 9 சடலங்களை தன்னார்வலர்கள் மூலம் காவல்துறையினர் நல்லடக்கம்
உரிமை கோரப்படாத 9 சடலங்களை தன்னார்வலர்கள் மூலம் காவல்துறையினர் நல்லடக்கம்

தர்மபுரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத சடலங்கள் இருந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தினர் அந்த சடலங்களை புதைக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரிகள் இணைந்து நடத்தி வரும் "மை தர்மபுரி தன்னார்வலர்" குழுவின் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் 9 உடல்களுக்கும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தார். பின்னர் ஒரே இடத்தில் பெரிதாக வெட்டப்பட்ட சவக்குழியில் 9 சடலங்களை புதைத்தனர்.

இதையும் படிங்க: 37 நாட்களுக்குப்பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

தர்மபுரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத சடலங்கள் இருந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தினர் அந்த சடலங்களை புதைக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரிகள் இணைந்து நடத்தி வரும் "மை தர்மபுரி தன்னார்வலர்" குழுவின் மூலம் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் 9 உடல்களுக்கும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தார். பின்னர் ஒரே இடத்தில் பெரிதாக வெட்டப்பட்ட சவக்குழியில் 9 சடலங்களை புதைத்தனர்.

இதையும் படிங்க: 37 நாட்களுக்குப்பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.