ETV Bharat / state

பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி: கே.பி. அன்பழகன் தொடக்கிவைப்பு

author img

By

Published : Jan 4, 2021, 6:46 PM IST

தருமபுரி: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

minister kb anbalagan
minister kb anbalagan

தருமபுரி மாவட்டத்தில் 116 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 847 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக தலா இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியுதவியுடன் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் பெரியான அள்ளி, கெரகோட அள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் க. ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொங்கல் பரிசு வழங்கிய ஆட்சியர் கார்த்திகா
பொங்கல் பரிசு வழங்கிய ஆட்சியர் கார்த்திகா

இதையும் படிங்க: மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் 116 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 847 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக தலா இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியுதவியுடன் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் பெரியான அள்ளி, கெரகோட அள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் க. ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பொங்கல் பரிசு வழங்கிய ஆட்சியர் கார்த்திகா
பொங்கல் பரிசு வழங்கிய ஆட்சியர் கார்த்திகா

இதையும் படிங்க: மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.