ETV Bharat / state

'தாலிக்கு தங்கம்.. நிலுவையில் உள்ள உதவித் தொகைகள் விரைந்து வழங்கப்படும்'

author img

By

Published : Jul 6, 2021, 7:43 PM IST

தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளாக தாலிக்கு தங்கத்திட்டத்தின் நிலுவையில் தொகைகள் விரைந்து வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

minister geetha jeevan
minister geetha jeevan

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஜூலை.6) சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்குத் திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "1989ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து ரூ.25000ஆக உயர்த்தப்பட்டது.

தாலிக்கு தங்கம் திட்டம்:

அதையடுத்து ஜெயலலிதா ஆட்சியில், இத்திட்டத்துடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டமும் சேர்க்கப்பட்டது. 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இருப்பினும், அதற்கான நிதி சரிவர ஒதுக்கப்படவில்லை.

அதனால், கடந்த 3 ஆண்டுகளாகத் திருமண உதவித் திட்டம் பயனாளிகளைச் சென்றடையவில்லை. அவ்வாறு சுமார் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர், நிலுவை விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதேபோல, 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், அக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்த வைப்புத் தொகை திட்டத்திற்கும் நிதியுதவி ஒதுக்காமல் 23 ஆயிரம் பேருக்கு நிலுவையில் உள்ளது. இதனையும் விரைந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இளம் வயது திருமணங்களைத் தடுக்க மும்முரம்

இளம் வயது திருமணங்களைத் தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என்று அனைவர் மீதும் கைது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், ஜூன் மாதம் வரை 35 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இடவசதியின்மை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: திட்டங்களை நிறைவேற்ற ரூ.3000 கோடி தேவை - அமைச்சர் கீதா ஜீவன்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஜூலை.6) சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்குத் திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "1989ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து ரூ.25000ஆக உயர்த்தப்பட்டது.

தாலிக்கு தங்கம் திட்டம்:

அதையடுத்து ஜெயலலிதா ஆட்சியில், இத்திட்டத்துடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டமும் சேர்க்கப்பட்டது. 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இருப்பினும், அதற்கான நிதி சரிவர ஒதுக்கப்படவில்லை.

அதனால், கடந்த 3 ஆண்டுகளாகத் திருமண உதவித் திட்டம் பயனாளிகளைச் சென்றடையவில்லை. அவ்வாறு சுமார் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர், நிலுவை விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதேபோல, 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், அக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்த வைப்புத் தொகை திட்டத்திற்கும் நிதியுதவி ஒதுக்காமல் 23 ஆயிரம் பேருக்கு நிலுவையில் உள்ளது. இதனையும் விரைந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இளம் வயது திருமணங்களைத் தடுக்க மும்முரம்

இளம் வயது திருமணங்களைத் தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என்று அனைவர் மீதும் கைது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், ஜூன் மாதம் வரை 35 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இடவசதியின்மை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: திட்டங்களை நிறைவேற்ற ரூ.3000 கோடி தேவை - அமைச்சர் கீதா ஜீவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.