ETV Bharat / state

பேருந்தைப் பிடிக்க மாரத்தான் ஓட்டம் - கவலையில் கல்லூரி மாணவர்கள்!

author img

By

Published : Aug 30, 2019, 11:37 AM IST

தருமபுரி: போதிய பேருந்து வசதி இல்லாததால் பேருந்தில் ஏற கல்லூரி மாணவர்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடுவது போல வேகமாக ஓடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தை பிடிக்க மராத்தான் ஓட்டம் - கவலையில் கல்லூரி மாணவர்கள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் - பாப்பாரப்பட்டி சாலையில் மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 2,000 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.

பேருந்தை பிடிக்க மராத்தான் ஓட்டம் - கவலையில் கல்லூரி மாணவர்கள்

இம்மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு வசதியாக முறையான பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு மாலை நான்கு மணியளவில் 18, 43 தடம் எண்கள் கொண்ட இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு முன்பே மாணவர்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடுவது போல வேகமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறும் அவலம் தினமும் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மாணவர்களுக்கு கூட்டத்தில் தடுக்கி கீழே விழுந்து காயங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் இன்னும் கூடுதலான பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்பதே மாணவ மாணவியரின் வேண்டுகோளாக உள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் - பாப்பாரப்பட்டி சாலையில் மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 2,000 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.

பேருந்தை பிடிக்க மராத்தான் ஓட்டம் - கவலையில் கல்லூரி மாணவர்கள்

இம்மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு வசதியாக முறையான பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு போன்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு மாலை நான்கு மணியளவில் 18, 43 தடம் எண்கள் கொண்ட இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு முன்பே மாணவர்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடுவது போல வேகமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறும் அவலம் தினமும் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மாணவர்களுக்கு கூட்டத்தில் தடுக்கி கீழே விழுந்து காயங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் இன்னும் கூடுதலான பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்பதே மாணவ மாணவியரின் வேண்டுகோளாக உள்ளது.

Intro:tn_dpi_01_camping_news_bus_problam_vis_byte_7204444


Body:tn_dpi_01_camping_news_bus_problam_vis_byte_7204444


Conclusion:

பேருந்து பயணத்திற்காக மராத்தான் ஓட்டப்பந்தயம் ஓடும் பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள். பேருந்து வசதி செய்து தரக்கோரி அரசுக்கு கோரிக்கை.           தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளது .இப்பாடப் பிரிவில் மொத்தம் 2,000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் கல்லூரி பென்னாகரம் -  பாப்பாரப்பட்டி சாலையில்  மாமரத்துபள்ளம்   பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது .மேலும் இக் கல்லூரிக்கு மாணவர்கள் சென்றுவர முறையான பேருந்து வசதிகளும் இப்பகுதியில் இல்லை.பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர் பாலக்கோடு. பென்னாகரம். ஏரியூர். பாப்பாரப்பட்டி .கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி. போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் இரண்டு மூன்று பேருந்துகள் தொடர் பயணம் செய்து கல்லூரிக்கு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் காலையில் கல்லூரிக்கு வருவதற்கும் மாலையில் கல்லூரியிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் முறையான பேருந்து வசதி இல்லை. மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் பென்னாகரம் பகுதிக்கு செல்வதற்கு தர்மபுரி பாலக்கோடு போன்ற பகுதிக்கு செல்வதற்கும் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது .

பேருந்து எண் 18 மற்றும் 43 இந்த எண் பேருந்துகளுக்கு மாணவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முண்டியடித்துக்கொண்டு ஓட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இப் பேருந்துகள் மாலை 4 மணிக்கு இயக்கப்படுவதால் அந்த நேரத்தில் மாற்றுப் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் வேறு ஏதும் இயக்கப்படாததால் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு முன்பே மாணவர்கள் பேருந்தை பார்த்தவுடன் மாரதான் ஓட்டப் பந்தய போட்டியில்  ஓடுவது போல வேகமாக ஓடிச் செல்கின்றனர் இதனை பார்த்து பேருந்து ஓட்டுனர்கள் மாணவர்கள் வருவதற்கு முன்பே பேருந்து நிறுத்தி விடுகின்றனர் இத்தகைய போக்கு தினம்தினம் நடைபெற்று வருகிறது பேருந்து பயணத்திற்கு மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் ஓடிச்சென்று ஏற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் சில நேரங்களில் மாணவர்கள் பேருந்தில் ஏற வேகமாக ஓடும் பொழுது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது .எனவே கல்லூரி விடக்கூடிய மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கி கல்லூரியில் இருந்து தருமபுரி செல்வதற்கும் மற்றும் மாமரத்துபள்ளம் பகுதியிலிருந்து பென்னாகரம் செல்வதற்கும் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்கவேண்டும் என்பதே இக் கல்லூரி மாணவ மாணவியரின் வேண்டுகோளாக உள்ளது.
இடம் பென்னாகரம் அரசு கலைக்கல்லூரி மாமரத்து பள்ளம். தருமபுரி மாவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.