Claim: பிப்ரவரி 23 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் பாபர் அசாமை அவமதிப்பது போன்ற வைரல் வீடியோ. |
Fact: வைரல் வீடியோ நவம்பர் 16, 2024 அன்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா டி20 போட்டிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி 23 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான் அணியில் சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தைப் பதிவு செய்திருந்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணியின் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். இந்தியா மொத்தம் 242 ரன்களை எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் வாயிலாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பவுண்டரிக்கு அருகில் பீல்டிங் செய்தபோது பார்வையாளர்கள் அவரை அவமதித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது அசாம் அவமானத்தை எதிர்கொண்டதாகக் கூறி அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
बाबर आज़म की बेइज्जती पाकिस्तान के फैन्स ही बहुत कर रहे थे.. 🤣🤣#INDvsPAK pic.twitter.com/zUkdx5NtRe
— BITTU SHARMA- بٹو شرما (@common000786Om) February 24, 2025
வீடியோவில், ரசிகர்கள் "பாபர், கொஞ்சம் வெட்கப்படுங்கள்! டி20 தொடரில் இடம் பெறத் தகுதியில்லை லாகூருக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்றார். பாபர் திரும்பி பார்வையாளர்களை முறைத்துப் பார்க்கிறார். அவர்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். இருப்பினும் மோசமான ஆடியோ தரம் காரணமாக அவர்களின் பதில் தெளிவாக பதிவாகவில்லை.
ஒரு எக்ஸ் பயனர் '#INDvsPAK' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வீடியோவைப் பகிர்ந்து, "பாபர் அசாம் பாகிஸ்தான் ரசிகர்களால் அவமதிக்கப்படுகிறார்" என்று பதிவு செய்திருந்தார்.
வைரலாகப் பரவிவரும் வீடியோவின் காப்புப்பிரதியை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
இந்த செய்தி தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்தது. இந்த வீடியோ 2024 நவம்பரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியின் போது எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை போட்டியில் வீடியோ எடுக்கப்படவில்லை என்பதற்கான முதல் ஆதாரங்களில் ஒன்று, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கும், டி20 கிரிக்கெட்டில் போட்டியில் விளையாடுவதற்குமான வித்தியாசங்கள் ஆகும்.
கூடுதலாக, 'சிட்னி கிரிக்கெட் மைதானம்' என்று எழுதப்பட்ட ஒரு பெரிய திரை மைதானத்தில் இருப்பதால், இந்த வீடியோ பிப்ரவரி 23, 2025 அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் இருந்து அல்ல என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த தடயங்களின் அடிப்படையில், நாங்கள் ஒரு முக்கிய தேடலை மேற்கொண்டோம். அதில் நவம்பர் 17, 2024 அன்று வெளியிடப்பட்ட NDTV செய்தியை கண்டறிந்தோம். அதில், "பாபர் அசாம் 'நீங்கள் டி20 அணியில் ஒரு இடத்துக்கு தகுதியற்றவர்' என்ற தலைப்பில் ரசிகர்களால் தூற்றப்பட்டதும், அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்பதும் இருந்தது.
கிரிக்-பஸ் (CricBuzz) தளத்தில் உள்ள தகவல்களின்படி, பாகிஸ்தான் நவம்பர் 2024 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. வைரலாகும் வீடியோ நவம்பர் 16, 2024 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் இருந்து எடுக்கப்பட்டது.
எனவே, பாபர் அசாமை ரசிகர்கள் அவமதிக்கும் வீடியோ பிப்ரவரி 23, 2025 அன்று விளையாடிய இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எடுக்கப்பட்டதல்ல என்று உலாவரும் வீடியோ தவறாகப் பரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
(குறிப்பு: இது முதலில் News Meter-இல் வெளியிடப்பட்டது. போலி செய்திகளை ஒழிக்கும் 'சக்தி கலெக்டிவ்' (Sakthi Collective) திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தித் தளத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டது)
Fact Check |
Claim: பிப்ரவரி 23 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025 கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்கள் பாபர் அசாமை அவமதிப்பது போன்ற வைரல் வீடியோ. Claimed By: Social Media Users Claim Reviewed By: News Meter Claim Source: Social Media Fact Check: Misleading |