ETV Bharat / state

கார்த்திகை தீபம் - தருமபுரியில் அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்! - dharmapuri latest news

தருமபுரி: கார்த்திகை தீபத்தையொட்டி அதியமான்கோட்டையில் அகல்விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

dharmapuri
author img

By

Published : Nov 19, 2019, 10:23 PM IST

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மண் பாண்டங்களுக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் அகல்விளக்கு, கொலுபொம்மைகள், பொங்கப் பானைகள், விநாயகர் சிலைகள் போன்றவை கைகளால் செய்யப்பட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்துவகின்றனர்.

நாளொன்றுக்கு தனிநபர் சுமார் 500 முதல் 1000 அகல் விளக்குகள் வரை தயாரிக்கின்றார். அதியமான்கோட்டையில் ஐந்து வகையான அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்குகள் 1 ரூபாய்க்கும், பெரிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரியில் அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்

இந்தத் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால், இது தற்போது நலிவடைந்து வருகிறது. பலரும் இத்தொழிலை விட்டுவிட்ட நிலையில் ஒரு சிலர் மட்டுமே, இத்தொழில் அழியாமலிருக்க இன்றளவும் இதனை செய்துவருகின்றனர். பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்கு அச்சு விளக்குக்குப் பதிலாக கைகளால் தயாரிக்கப்படும் மண் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றினால், நம் வீட்டுடன் மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளா்கள் வீட்டிலும் விளக்கு எரியும்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா - 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மண் பாண்டங்களுக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இப்பகுதியில் அகல்விளக்கு, கொலுபொம்மைகள், பொங்கப் பானைகள், விநாயகர் சிலைகள் போன்றவை கைகளால் செய்யப்பட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்துவகின்றனர்.

நாளொன்றுக்கு தனிநபர் சுமார் 500 முதல் 1000 அகல் விளக்குகள் வரை தயாரிக்கின்றார். அதியமான்கோட்டையில் ஐந்து வகையான அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்குகள் 1 ரூபாய்க்கும், பெரிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரியில் அகல்விளக்கு தயாரிப்பு மும்முரம்

இந்தத் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால், இது தற்போது நலிவடைந்து வருகிறது. பலரும் இத்தொழிலை விட்டுவிட்ட நிலையில் ஒரு சிலர் மட்டுமே, இத்தொழில் அழியாமலிருக்க இன்றளவும் இதனை செய்துவருகின்றனர். பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்கு அச்சு விளக்குக்குப் பதிலாக கைகளால் தயாரிக்கப்படும் மண் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றினால், நம் வீட்டுடன் மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளா்கள் வீட்டிலும் விளக்கு எரியும்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா - 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

Intro:தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரம் மண்விளக்குவாங்கி தங்கள்வாழ்க்கையில் ஒளியேற்ற கோரிக்கை.Body:தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரம் மண்விளக்குவாங்கி தங்கள்வாழ்க்கையில் ஒளியேற்ற கோரிக்கை.Conclusion:தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திற்கு அகல்விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரம் மண்விளக்குவாங்கி தங்கள்வாழ்க்கையில் ஒளியேற்ற கோரிக்கை.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை என்றாலே மண்ணால் செய்யும் அகல்விளக்கு, கொலுபொம்மைகள், பொங்கல் பானைகள் மற்றும் விநாயகர் சிலைகள் என பாரம்பரிய பெயர் பெற்ற இடம். பரம்பரை பரம்பரையாக 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மண்பாண்ட தொழில் செய்துவந்தனர். நாளடைவில் இத்தொழில் நலிவடைந்து தற்போது சுமார் 20 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

பாரம்பரியமுறைப்படியும், எந்த வித சுற்றுசுழலை பாதிக்காத வகையிலும் மண்ணால் தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் தற்போது சந்தைகளிலும் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் தயாரியப்பாளர்கள் உள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ஒருவர் சுமார்500 முதல் 1000 அகல்விளக்குகளை தயாரிக்கின்றனர். சக்கரத்தை சுற்றிவிட்டு அதன் நடுவே களிமண்ணைக்கொண்டு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் நன்கு வெயிலில் காயவைக்கப்படுகிறது. பின் அடுக்கிவைத்து சூளையில் சுடப்படுகிறது. இதன்பின் அட்டை பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்டு விற்பனைக்ககு அனுப்பப்படுகிறது.
அதியமான்கோட்டையில் 5 வகையான அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. சிறிய அகல் விளக்குகள் 1 ரூபாய்க்கும், பெரிய அகல்விளக்குள் 10 ரூபாய் வரை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக விற்கப்படுகிறது. மொத்தமாக கொள்முதல் செய்யும் போது ஆயிரம் அகல் விளக்குகள் 400 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். ஆயிரம் விளக்குகள் தயார்செய்ய 200 ரூபாய்க்கு மேல் செலவாகிறது என்றும். ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாலும் 200 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை என வேதனையாடு கூறுகின்றனர். தற்போது பல ஏரிகளில் குடிமராமத்து பணி செய்ததால் மண் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர் . இந்தத் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் பலர் இத்தொழிலை விட்டு கூலி வேலைக்காக வெளியூர்களுக்குச் சென்று விட்டதாகவும் ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த தொழிலை அழியாமல் பாதுகாத்து வருவதாக கூறுகின்றனர்.
அகல்விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு மான்ய கடன் உதவிகளை வழங்கினால் இத்தொழில் நலிவடைந்துள்ள நிலையில் மீண்டும் பொலிவுபெறும் என்று இதன் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்கு அச்சு விளக்குக்குபதிலாக மண்விளக்கு வாங்கி தீபம் ஏற்றினால் இது மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளா்கள் வாழ்வில் ஒளி ஏற்றும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.