ETV Bharat / state

தருமபுரியில் தீவிர வாகன சோதனை!

author img

By

Published : May 15, 2021, 10:53 AM IST

தருமபுரியில் கரோனா அதிகரிப்பு காரணமாக காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

போலீசார் சோதனை
போலீசார் சோதனை

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (மே.15) காலை முதல் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மேம்பாலம், குமாரசாமிபேட்டை, நான்கு ரோடு ஆகிய இடங்களில் காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரை மட்டுமே நகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தருமபுரியில் தீவிர வாகன சோதனை!

அதனை தொடர்ந்து சில இளைஞர்கள் ஊர் சுற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சுற்றி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (மே.15) காலை முதல் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மேம்பாலம், குமாரசாமிபேட்டை, நான்கு ரோடு ஆகிய இடங்களில் காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரை மட்டுமே நகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தருமபுரியில் தீவிர வாகன சோதனை!

அதனை தொடர்ந்து சில இளைஞர்கள் ஊர் சுற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சுற்றி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.