ETV Bharat / state

தருமபுரியில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Nov 21, 2019, 5:46 PM IST

தருமபுரி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு தென்பெண்னை ஆறு முக்கிய ஆதாரமாக உள்ளது. கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது.

கர்நாடக அரசு தடுப்பணை கட்டினால் ஐந்து மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டிக்காத அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட திமுக செயலாளரும், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடங்கம் சுப்பிரமணி, 'கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், ஐந்து மாவட்ட விவசாயிகளுடன் சேர்ந்து மீண்டும் திமுகவினர் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்பெண்ணையாறு விவகாரம் - திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி யோசனை

தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு தென்பெண்னை ஆறு முக்கிய ஆதாரமாக உள்ளது. கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது.

கர்நாடக அரசு தடுப்பணை கட்டினால் ஐந்து மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டிக்காத அதிமுக அரசைக் கண்டித்து மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட திமுக செயலாளரும், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடங்கம் சுப்பிரமணி, 'கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், ஐந்து மாவட்ட விவசாயிகளுடன் சேர்ந்து மீண்டும் திமுகவினர் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்பெண்ணையாறு விவகாரம் - திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி யோசனை

Intro:tn_dpi_01_dmk_protest_vis_720444Body:tn_dpi_01_dmk_protest_vis_720444Conclusion:தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய அதிமுக அரசை கண்டித்து தருமபுரியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து உருவாகி தமிழகத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி கடலூர் திருவண்ணாமலை விழுப்புரம் என ஐந்து மாவட்டங்கள் வழியாக தென்பெண்ணையாறு விவசாயிகளுக்கு பாசன வசதி பெற்று வருகிறார்கள். கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி வருகிறது. கர்நாடக அரசு தடுப்பணை கட்டி னால்5மாவட்ட தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள்.தடுப்பணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தடுத்து நிறுத்தாத தமிழக அரசை கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே தருமபுரி திமுக மாவட்ட செயலாளரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி.திமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் மூலம் பல பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை.கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் தமிழக அரசு இப்பிரச்னையில் கர்நாடக அரசிடம் பேசி தடுத்து நிறுத்த வேண்டும்.கர்நாடக தடுப்பணைஅணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற்று 5 மாவட்ட விவசாயிகளோடு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தருமபுரி திமுக சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தெரிவித்தார்.

பேட்டி . திமுக.தருமபுரி சட்டமன்ற உறுப்பினா் தடங்கம் சுப்பிரமணி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.