ETV Bharat / state

திருமணம் செய்த நிலையில் காதல் ஜோடி தற்கொலை...!

author img

By

Published : Jun 9, 2020, 4:11 PM IST

தருமபுரி: அரூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள வனப்பகுதியில் திருமணம் செய்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரூர் அரசு மருத்துவமனை
அரூர் அரசு மருத்துவமனை

தருமபுரி மாவட்டம் அரூர் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ஆனந்தராஜ், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூலித் தொழில் செய்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகள் சோபியா என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனிடையே, ஆனந்தராஜின் பெற்றோர் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

அப்போது தான் சோபியாவை காதலிப்பதாக பெற்றோரிடம் ஆனந்தராஜ் தெரிவித்தார். பின்னர், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என பெற்றோர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆனந்தராஜ், சோபியா இருவரும் அரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று (ஜூன் 8) மாலை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

அரூர் அரசு மருத்துவமனை

அதையடுத்து, இன்று (ஜூன் 9) காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இருவரின் உடல்களையும் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு அரூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறு - முன்னாள் ராணுவ வீரர், தாய் தற்கொலை!

தருமபுரி மாவட்டம் அரூர் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ஆனந்தராஜ், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூலித் தொழில் செய்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகள் சோபியா என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனிடையே, ஆனந்தராஜின் பெற்றோர் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

அப்போது தான் சோபியாவை காதலிப்பதாக பெற்றோரிடம் ஆனந்தராஜ் தெரிவித்தார். பின்னர், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என பெற்றோர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆனந்தராஜ், சோபியா இருவரும் அரூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று (ஜூன் 8) மாலை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

அரூர் அரசு மருத்துவமனை

அதையடுத்து, இன்று (ஜூன் 9) காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இருவரின் உடல்களையும் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு அரூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறு - முன்னாள் ராணுவ வீரர், தாய் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.