தருமபுரி மாவட்டத்தில் 8 ஒன்றிய தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணி கைபற்றியது. அதில் நல்லம்பள்ளி, தருமபுரி, கடத்துா், அரூா், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று 8 ஒன்றிய தலைவர்கள் பதவியை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி எட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.
மேலும் பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் அதிமுக கூட்டணி கைப்பற்றியதன் மூலம் மீண்டும் இவ்விரு இடங்களும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க:பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!