ETV Bharat / state

விருத்தாசலம் விருதாம்பிகை அம்மன் கோயில் கலசங்கள் திருட்டு

author img

By

Published : Mar 1, 2022, 10:54 AM IST

விருத்தாசலம் விருதாம்பிகை அம்மன் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் விருதாம்பிகை அம்மன் கோயில் கலசங்கள் திருட்டு
விருத்தாசலம் விருதாம்பிகை அம்மன் கோயில் கலசங்கள் திருட்டு

கடலூர்: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள மணிமுக்தா ஆற்றில் நீராடி விருத்தகிரீஸ்வரரை வணங்கினால், காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடி சென்றுள்ளனர். இத்திருக்கோயிலில் பஞ்சாட்சர முறைப்படி 5 கோபுரம், 5 கொடிமரம், 5 தீர்த்தம், 5 தேர், 5 நந்தி , 5 மண்டபம், 5 கால பூஜை என சிறப்புடையது. கடந்த 6ஆம் தேதி இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (பிப். 28) நள்ளிரவு விருதாம்பிகை அம்மன் சன்னதியில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கோயில் கலசங்களை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர் : நீலகிரியில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

கடலூர்: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள மணிமுக்தா ஆற்றில் நீராடி விருத்தகிரீஸ்வரரை வணங்கினால், காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடி சென்றுள்ளனர். இத்திருக்கோயிலில் பஞ்சாட்சர முறைப்படி 5 கோபுரம், 5 கொடிமரம், 5 தீர்த்தம், 5 தேர், 5 நந்தி , 5 மண்டபம், 5 கால பூஜை என சிறப்புடையது. கடந்த 6ஆம் தேதி இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (பிப். 28) நள்ளிரவு விருதாம்பிகை அம்மன் சன்னதியில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கோயில் கலசங்களை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர் : நீலகிரியில் தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.