ETV Bharat / state

வீராணம் ஏரியில் ஆண் சடலம் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை! - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீராணம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
வீராணம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
author img

By

Published : Aug 28, 2020, 9:22 PM IST

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஓரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், ஏரியின் கரையோரம் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரியில் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் பிணமாக மீட்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஓரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர், ஏரியின் கரையோரம் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரியில் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் பிணமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.