ETV Bharat / state

சின்னம் ஒதுக்கீட்டில் தகராறு - தேர்தல் அலுவலரைத் தாக்கிய அதிமுகவினர் - AIADMK attacking election officer Cuddalore

கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் தேர்தல் அலுவலரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

symbol
symbol
author img

By

Published : Dec 20, 2019, 3:17 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 520 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடைபெற்று, 20 ஆயிரத்து 370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர், திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு 'குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம்' ஒதுக்கியதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு உதயசூரியன் சின்னம் வேண்டும் என்று கேட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

இதுபற்றி அறிந்த அதிமுகவினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தேர்தல் அலுவலர் அருள் அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் அப்பெரும் பரபரப்பு நிலவியது.

தேர்தல் அலுவலரை தாக்கும் அதிமுகவினர்

மேலும், அதிமுகவினர் அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த புதுநகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த அலுவலர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்கக் கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

விசிக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 520 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடைபெற்று, 20 ஆயிரத்து 370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர், திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு 'குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம்' ஒதுக்கியதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு உதயசூரியன் சின்னம் வேண்டும் என்று கேட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

இதுபற்றி அறிந்த அதிமுகவினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தேர்தல் அலுவலர் அருள் அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் அப்பெரும் பரபரப்பு நிலவியது.

தேர்தல் அலுவலரை தாக்கும் அதிமுகவினர்

மேலும், அதிமுகவினர் அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த புதுநகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த அலுவலர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்கக் கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

விசிக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு

Intro:கடலூரில் சின்னங்கள் ஒதுக்கியதில் பாகுபாடு காட்டியதாக அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரியை தாக்கியதால் பரபரப்பு Body:கடலூர்
டிசம்பர் 20,

கடலூரில் சின்னங்கள் ஒதுக்கியதில் பாகுபாடு காட்டியதாக அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ம் தேதி தொடங்கி 16-ந் தேதி முடிவடைந்தது. கடலூர் மாவட்டம் முழுவதிலும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 520 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது. 20 ஆயிரத்து 370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 19-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.

அதன்படி கடலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று ஒரு சிலர் வந்து தங்களது மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர். மேலும் நேற்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர் மற்றும் திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம் ஒதுக்கியதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்து தருமாறு கூறினர். உடனே தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்

இதுபற்றி அறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 200 அக்கு மேற்பபட்டோர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து
சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தேர்தல் அதிகாரியான அருள்அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர் இதனால் பெரும் பரபரப்பு நிலவியது

இதனை தொடர்நது அதிமுகவினர் விசிகக்கு கொடுத்த திமுக சின்னத்தை திரும்பபெற வலியுறுத்தி அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்த புதுநகர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்க கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் தலைமையில் அக்கட்சியினர் ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தோ்தல் நடத்தும் அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


இதுபற்றி அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.