ETV Bharat / state

கோவையில் கொடூரம்: மதுபோதையில் இளைஞர் கொலை

author img

By

Published : May 22, 2019, 12:29 PM IST

கோவை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்

கோவை போத்தனூர் அருகேயுள்ள ஸ்ரீ ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் பிரிட்டோ மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு ஜான் பிரிட்டோ தனது நண்பர் பிரவீன் என்பவருடன், அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது போதையில் போத்தனூரைச் சேர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து, ஜான் பிரிட்டோ அவரது நண்பர் பிரவீன் உடன் இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில், ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுபோதையில் தகராறு ஏற்பட்டு இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் அருகேயுள்ள ஸ்ரீ ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். ஜான் பிரிட்டோ மீது ஏற்கனவே கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு ஜான் பிரிட்டோ தனது நண்பர் பிரவீன் என்பவருடன், அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது போதையில் போத்தனூரைச் சேர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து, ஜான் பிரிட்டோ அவரது நண்பர் பிரவீன் உடன் இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில், ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மதுபோதையில் தகராறு ஏற்பட்டு இளைஞரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சு.சீனிவாசன்.       கோவை


கோவை போத்தனூர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை விரட்டி சென்று வீட்டின் முன்பு கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை போத்தனூர் அருகேயுள்ள ஸ்ரீ ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அவரது 28 வயது மகன் ஜான் பிரிட்டோ பெயிண்டராக பணியாற்றி வந்தார். ஜான் பிரிட்டோ மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஜான் பிரிட்டோ தனது நண்பரான பிரவீன் என்பவருடன், அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது போதையில் போத்தனூரை சேர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜான் பிரிட்டோ பிரவீன் உடன் இரு சக்கர வாகன தனது வீட்டிற்கு வந்த போது, அவர்கள் பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஜான் பிரிட்டோ வீட்டிற்குள் செல்ல முயன்ற போது, தடுத்து நிறுத்தி அக்கும்பல் தகராறில் ஈடுபட்டதோடு, ஜான் பிரிட்டோவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஒடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜான் பிரிட்டோவை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜான் பிரிட்டோ தாக்கியதில் காயமடைந்த காட்வின்ராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மில்டன், குட்டி ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.