ETV Bharat / state

ஆந்திர போலீஸால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு!

author img

By

Published : Feb 26, 2020, 8:19 AM IST

Updated : Feb 26, 2020, 11:06 AM IST

கோவை: பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவனை கைது செய்து துன்புறுத்தும் ஆந்திர காவல் துறையினரிடமிருந்து அவரை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Wife complains of husband arrested in fake case by AP police
Wife complains of husband arrested in fake case by AP police

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், அவர் மனைவி புவனேஸ்வரி. கடந்த நவம்பர் மாதம் வங்கியில் அடமானத்தில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த சிவாஜி - ஈஸ்வரி தம்பதியினரின் லாரியை வாங்கி அதற்கு மாதத் தவணை செலுத்திவந்துள்ளனர். ரவிச்சந்திரன் அந்த லாரியைக் கொண்டு லோடு ஏற்றி இறக்கும் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆந்திராவிலிருந்து சத்யநாராயணன் என்பவர் 25 டன் அரிசி லோடை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் லோடு வரவில்லை என்று ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார்.

அப்போது தான் எந்த லோடும் ஏற்றவில்லை என்றும் மேலும் கோவை முதல் சென்னை தவிர வேறு எங்கும் லோடுக்கு செல்வதில்லை என்றும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால் இதை நம்பாத சத்யநாராயணன், ஆந்திர காவல் துறையினரிடம் ரவிச்சந்திரன் மீது புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் ரவிச்சந்திரன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து லாரியை பார்க்க வேண்டும் என்று கூறி ரவிச்சந்திரனை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று, கோவை - திருச்சி சாலையிலுள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை காண்பிக்க ரவிச்சந்திரன் சென்றுள்ளார். அங்கு சென்ற ரவிச்சந்திரனையும் அவரது லாரியையும் அங்கிருந்த ஆந்திர காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறிதுநேரம் கழித்து தனது மனைவிக்கு செல்போனில் தொடர்புகொண்ட ரவிச்சந்திரன், தன்னை ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார்.

அதன்பின் கடந்த மாதம் 17ஆம் தேதி புவனேஸ்வரிக்கு, ஆந்திர மாநிலம் ராயவரம் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், ரவிச்சந்திரன் மோசடி புகாரில் கைதுசெய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த புவனேஸ்வரி தனது கணவனை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

புவனேஸ்வரி பேட்டி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, கடந்த மாதம் 17ஆம் தேதி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ரவிச்சந்திரனுடைய லாரியின் காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போனதாகவும் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தால் உண்மை புலப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு திருப்பூரைச் சேர்ந்த சிவாஜியின் மீதுதான் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விருதுநகரில் இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளுக்கு வலை வீச்சு..!

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், அவர் மனைவி புவனேஸ்வரி. கடந்த நவம்பர் மாதம் வங்கியில் அடமானத்தில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த சிவாஜி - ஈஸ்வரி தம்பதியினரின் லாரியை வாங்கி அதற்கு மாதத் தவணை செலுத்திவந்துள்ளனர். ரவிச்சந்திரன் அந்த லாரியைக் கொண்டு லோடு ஏற்றி இறக்கும் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆந்திராவிலிருந்து சத்யநாராயணன் என்பவர் 25 டன் அரிசி லோடை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் லோடு வரவில்லை என்று ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார்.

அப்போது தான் எந்த லோடும் ஏற்றவில்லை என்றும் மேலும் கோவை முதல் சென்னை தவிர வேறு எங்கும் லோடுக்கு செல்வதில்லை என்றும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால் இதை நம்பாத சத்யநாராயணன், ஆந்திர காவல் துறையினரிடம் ரவிச்சந்திரன் மீது புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் ரவிச்சந்திரன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து லாரியை பார்க்க வேண்டும் என்று கூறி ரவிச்சந்திரனை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று, கோவை - திருச்சி சாலையிலுள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை காண்பிக்க ரவிச்சந்திரன் சென்றுள்ளார். அங்கு சென்ற ரவிச்சந்திரனையும் அவரது லாரியையும் அங்கிருந்த ஆந்திர காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறிதுநேரம் கழித்து தனது மனைவிக்கு செல்போனில் தொடர்புகொண்ட ரவிச்சந்திரன், தன்னை ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார்.

அதன்பின் கடந்த மாதம் 17ஆம் தேதி புவனேஸ்வரிக்கு, ஆந்திர மாநிலம் ராயவரம் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், ரவிச்சந்திரன் மோசடி புகாரில் கைதுசெய்யபட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த புவனேஸ்வரி தனது கணவனை மீட்டுத்தரக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

புவனேஸ்வரி பேட்டி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, கடந்த மாதம் 17ஆம் தேதி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ரவிச்சந்திரனுடைய லாரியின் காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போனதாகவும் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தால் உண்மை புலப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு திருப்பூரைச் சேர்ந்த சிவாஜியின் மீதுதான் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விருதுநகரில் இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளுக்கு வலை வீச்சு..!

Last Updated : Feb 26, 2020, 11:06 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.