ETV Bharat / state

கோயில் அன்னதானத்தின் போது மரியாதையின்றி நடந்து கொண்ட இரு பெண் பணியாளர்களின் வீடியோ வைரல்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 2:52 PM IST

Karattumedu Temple: கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு முறையாக அன்னதானம் வழங்காமல் மரியாதையின்றி நடந்துகொண்டு இரண்டு பெண் பணியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

video of two women workers disrespecting the devotees at Karattumedu Temple goes viral
கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதானத்தில் ஏற்பட்ட குழப்பம்

கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதானத்தில் ஏற்பட்ட குழப்பம்

கோயம்புத்தூர்: கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதான கூடத்தில் பக்தர்களிடம் மரியாதையின்றி கடுமையாக நடந்து கொள்ளும் பெண் பணியாளர்களால் பக்தர்களின் மன அமைதி பாதிக்கப்படுவதாகக் கோயில் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் கடந்த டிச.31ஆம் தேதி சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரி மருதாச்சல கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் அன்னதானத்திற்காக கோயிலில் அமர்ந்து காத்திருந்துள்ளனர். அன்னதான கூடத்தில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அங்கிருந்த ஒருவர் அன்னதானம் செய்யுமாறு பணியாளர்களை அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் பாக்கியலட்சுமி, ரத்தினம் என்ற இரண்டு பெண் பணியாளர்கள் பக்தர்களுக்கு முறையாக உணவு பரிமாறாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அன்னதானம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என உணவு பரிமாறிய பணியாளர் பாக்கியலட்சுமி கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து சக பக்தர்கள் கேள்வி எழுப்புகையில் அவர்களிடமும் மரியாதையின்றி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் அன்னதான கூடத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிடில் போராட்டம் உறுதி - போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம்

இந்நிலையில் இந்த சம்பவத்தை ராஜேஷ் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததோடு அதனை ஆதாரமாகக் கொண்டு இரு பெண் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவில் இயக்குநருக்கு புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட கோயில் செயல் அலுவலர் இரு பெண் பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அரசு சார்பில் அன்னதானம் வழங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இது போன்று பக்தர்களுக்கு உணவளிக்காமல் மரியாதையின்றி நடந்து கொள்வோரால் கோயிலுக்கு வருவோரின் மன அமைதி பாதிக்கப்படுகிறது.

பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் இது போன்ற பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது எனவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு..பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதானத்தில் ஏற்பட்ட குழப்பம்

கோயம்புத்தூர்: கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதான கூடத்தில் பக்தர்களிடம் மரியாதையின்றி கடுமையாக நடந்து கொள்ளும் பெண் பணியாளர்களால் பக்தர்களின் மன அமைதி பாதிக்கப்படுவதாகக் கோயில் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் கடந்த டிச.31ஆம் தேதி சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரி மருதாச்சல கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் அன்னதானத்திற்காக கோயிலில் அமர்ந்து காத்திருந்துள்ளனர். அன்னதான கூடத்தில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அங்கிருந்த ஒருவர் அன்னதானம் செய்யுமாறு பணியாளர்களை அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் பாக்கியலட்சுமி, ரத்தினம் என்ற இரண்டு பெண் பணியாளர்கள் பக்தர்களுக்கு முறையாக உணவு பரிமாறாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அன்னதானம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என உணவு பரிமாறிய பணியாளர் பாக்கியலட்சுமி கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து சக பக்தர்கள் கேள்வி எழுப்புகையில் அவர்களிடமும் மரியாதையின்றி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் அன்னதான கூடத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிடில் போராட்டம் உறுதி - போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம்

இந்நிலையில் இந்த சம்பவத்தை ராஜேஷ் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததோடு அதனை ஆதாரமாகக் கொண்டு இரு பெண் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவில் இயக்குநருக்கு புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட கோயில் செயல் அலுவலர் இரு பெண் பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அரசு சார்பில் அன்னதானம் வழங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இது போன்று பக்தர்களுக்கு உணவளிக்காமல் மரியாதையின்றி நடந்து கொள்வோரால் கோயிலுக்கு வருவோரின் மன அமைதி பாதிக்கப்படுகிறது.

பக்தர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் இது போன்ற பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது எனவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு..பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.