ETV Bharat / state

இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லையை கடக்க முயன்ற வாகனங்கள் - காவல்துறை கடும் நடவடிக்கை! - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: இ-பாஸ் இல்லாமல் கோவையிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு சென்ற வாகனங்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Vehicles trying to cross the border without e-pass
Vehicles trying to cross the border without e-pass
author img

By

Published : May 24, 2020, 10:29 AM IST

கரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பொதுமக்கள் பயணிக்க இ-பாஸ் முறையை பயன்படுத்தலாம் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் வாகன ஓட்டிகள் பயணிப்பதாக புகார் எழுந்த நிலையில், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டை பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்தில் இருந்து வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திருப்பூர் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் கோவை மாவட்டத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இச்சோதனை காரணமாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதினால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க:திருப்பூரில் போதை மிட்டாய்கள் பறிமுதல் - 3 பேர் கைது

கரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பொதுமக்கள் பயணிக்க இ-பாஸ் முறையை பயன்படுத்தலாம் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் வாகன ஓட்டிகள் பயணிப்பதாக புகார் எழுந்த நிலையில், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டை பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்தில் இருந்து வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திருப்பூர் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் கோவை மாவட்டத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இச்சோதனை காரணமாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதினால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க:திருப்பூரில் போதை மிட்டாய்கள் பறிமுதல் - 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.