ETV Bharat / state

வால்பாறையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - Accident

கோவை: சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து
author img

By

Published : May 16, 2019, 10:37 AM IST

சென்னையைச் சேர்ந்த விஜயன் என்பவர் அவரது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கொண்டாட சென்னையிலிருந்து கன்னியகுமாரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை, பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது.

வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்து

அதன்படி, நேற்று வால்பாறையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அங்கிருந்து பொள்ளாச்சிக்கு செல்ல விஜயனனின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த விஜயனின் வேன், வால்பாறை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாறை மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஒரு பெண், குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காடம்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த விஜயன் என்பவர் அவரது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கொண்டாட சென்னையிலிருந்து கன்னியகுமாரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை, பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது.

வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்து

அதன்படி, நேற்று வால்பாறையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அங்கிருந்து பொள்ளாச்சிக்கு செல்ல விஜயனனின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த விஜயனின் வேன், வால்பாறை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாறை மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஒரு பெண், குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காடம்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வந்த வேன் விபத்து 11 பேர் காயம்  விபத்து குறித்து போலீசார் விசாரனை . பொள்ளாச்சி-16  வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்த சுற்றுலா வேன் 3வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்ப்பட்டது.கடந்த 10ம் தேதி சென்னை திருவான்மீயூர் சேர்ந்த விஜயன் குடும்பத்தார் கோடை விடுமுறையை கொண்ட டும் விதமாக சென்னையிலிருந்து கன்னியகுமாரி, இராமேஸ்வரம் திருச்செந்துர், மதுரை, பழனி, என சுற்றுலா தளங்கள் சென்று பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை க்குசுற்றுலா சென்றனர். பின் வால்பாறை வழியாக கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று இன்று மாலை பொள்ளாச்சிக்கு வரும் பொழுது வால்பாறை 3வது கொண்டை ஊசி வளைவில் வேன் வரும் பொழுது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் பிரேக் பிடிக்காமல் நிலை தடுமாறி பாறையில் மோதி நின்றது  பின் வந்த தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தரப்பட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலதவி அளிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் காயம் அடைந்த குழந்தை மற்றும் பெண் ஒருவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.