ETV Bharat / state

திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு - vanathi Srinivasan

கோவை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை ஒப்புவித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thirukkural
thirukkural
author img

By

Published : Jan 16, 2020, 3:56 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி கிளப் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ’திருக்குறள் சேமிப்போம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த திருக்குறளை கூறி வானதி சீனிவாசனிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். இதில் வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர்.

குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு

நிகழ்ச்சியின்போது பேசிய வானதி சீனிவாசன், ”திருவள்ளுவர் என்பவர் வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் இரண்டே வரிகளில் கூறியவர். அவரின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு திருக்குறளை கற்றுத்தந்து தமிழை வளர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி கிளப் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ’திருக்குறள் சேமிப்போம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த திருக்குறளை கூறி வானதி சீனிவாசனிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். இதில் வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர்.

குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு

நிகழ்ச்சியின்போது பேசிய வானதி சீனிவாசன், ”திருவள்ளுவர் என்பவர் வாழ்க்கையின் அனைத்து விதிகளையும் இரண்டே வரிகளில் கூறியவர். அவரின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு திருக்குறளை கற்றுத்தந்து தமிழை வளர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!

Intro:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்குக் திருக்குறள் ஒப்புவித்து பரிசுகள் வழங்கும் விழா


Body:கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் சேமிப்போம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த திருக்குறளைப் கூறி வானதி சீனிவாசன் அவர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர். அதில் வெளிநாட்டு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய வானதி சீனிவாசன் திருவள்ளுவர் என்பவர் வாழ்க்கையின் அனைத்து நதிகளையும் இரண்டே வரிகளில் கூறியவர் என்று தெரிவித்தார் மேலும் அவரின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் இங்கு வந்திருக்கும் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு திருக்குறளை கற்றுத் தந்து தமிழை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே சமஸ்கிரதம் தோன்றிய முன்னாள் முதலில் தோன்றியது தமிழ் மொழிதான் என்று பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் திருக்குறளை சேமிப்போம் என்ற நோக்கில் அனைத்து குழந்தைகளுக்கும் திருக்குறளை கற்றுத்தரும் வகையிலும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு திருக்குறளை கற்றுத் தந்து தமிழை வளர்ப்பதே நாள் அவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கும் என்றும் தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.