ETV Bharat / state

தகுந்த இடைவெளியின்றி கூடும் திப்பம்பட்டி மாட்டுச் சந்தை: தொற்று பரவும் அபாயம்?

author img

By

Published : Sep 15, 2020, 3:45 PM IST

கோயம்புத்தூர்: கரோனா பரவும் சூழலில் பொள்ளாச்சியை அடுத்துள்ள திப்பம்பட்டியில் மாட்டுச் சந்தை தகுந்த இடைவெளியின்றி இயங்கி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுச் சந்தை
மாட்டுச் சந்தை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் மாட்டுச்சந்தை வாரம் இருமுறை நடைபெற்றுவருகிறது. இங்கு ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் வாங்க வியாபாரிகள் வருவது வாடிக்கை.

கடந்த ஆறு மாதங்களாக கரோனா பரவி வருவதால் மாட்டுச் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததையொட்டி, தொப்பம்பட்டி தனியார் தோட்டத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மாட்டுச் சந்தை கூடியதால் ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திப்பம்பட்டியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூவருக்கு கரோனா உறுதியானது.

தகுந்த இடைவெளியின்றி கூடும் திப்பம்பட்டி மாட்டுச் சந்தை!

திப்பம்பட்டியில் வெவ்வேறு இடத்திலிருந்து வரும் வியாபாரிகள் தற்போது மாட்டுச் சந்தைக்காக கூடுவதால் கரோனா பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:திப்பம்பட்டி மாட்டுச் சந்தைக்கு தடை: விவசாயிகள் வேதனை!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் மாட்டுச்சந்தை வாரம் இருமுறை நடைபெற்றுவருகிறது. இங்கு ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் வாங்க வியாபாரிகள் வருவது வாடிக்கை.

கடந்த ஆறு மாதங்களாக கரோனா பரவி வருவதால் மாட்டுச் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்ததையொட்டி, தொப்பம்பட்டி தனியார் தோட்டத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் மாட்டுச் சந்தை கூடியதால் ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திப்பம்பட்டியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூவருக்கு கரோனா உறுதியானது.

தகுந்த இடைவெளியின்றி கூடும் திப்பம்பட்டி மாட்டுச் சந்தை!

திப்பம்பட்டியில் வெவ்வேறு இடத்திலிருந்து வரும் வியாபாரிகள் தற்போது மாட்டுச் சந்தைக்காக கூடுவதால் கரோனா பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:திப்பம்பட்டி மாட்டுச் சந்தைக்கு தடை: விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.