ETV Bharat / state

மாணவிகளிடம் அத்துமீறிய ஹெட்மாஸ்டர்: பெற்றோர் சாலை மறியல் - students sexual harassment complaint against headmaster

கோவை: பள்ளித் தலைமையாசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகளின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

students sexual harassment complaint against headmaster
students sexual harassment complaint against headmaster
author img

By

Published : Feb 11, 2020, 3:14 PM IST

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இங்கு மாகாளியப்பன் (52) என்பவர் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் மற்றொருவர் ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர். இதில் மாகாளியப்பன் கடந்த சில நாள்களாக நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இதனை அந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த பெற்றோர், இது குறித்து ஆசிரியரிடம் கேட்க பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றுள்ளதாகத் தகவல் தெரித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்

தகவல் அறிந்து அங்கு சென்ற அலுவலர்கள் பெற்றோரிடம், முறையாகப் புகார் கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்நிலையில் இரவு திடீரென பெற்றோர் அனைவரும் திருப்பூர் பொள்ளாச்சி சாலையிலுள்ள காட்டம்பட்டி பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததின்பேரில் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் மகனுக்கு சீட் கேட்டதில் தகராறு - தந்தை தற்கொலை முயற்சி!

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இங்கு மாகாளியப்பன் (52) என்பவர் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் மற்றொருவர் ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர். இதில் மாகாளியப்பன் கடந்த சில நாள்களாக நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இதனை அந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த பெற்றோர், இது குறித்து ஆசிரியரிடம் கேட்க பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றுள்ளதாகத் தகவல் தெரித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்

தகவல் அறிந்து அங்கு சென்ற அலுவலர்கள் பெற்றோரிடம், முறையாகப் புகார் கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்நிலையில் இரவு திடீரென பெற்றோர் அனைவரும் திருப்பூர் பொள்ளாச்சி சாலையிலுள்ள காட்டம்பட்டி பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததின்பேரில் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் மகனுக்கு சீட் கேட்டதில் தகராறு - தந்தை தற்கொலை முயற்சி!

Intro:school issueBody:school issueConclusion:பொள்ளாச்சி
நெகமம் அடுத்த காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுகிறது இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாகாளியப்பன் 52, என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராகவும் மற்றொரு ஆசிரியர் ஆகிய இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் மாகாளியப்பன் கடந்த சில நாட்களாக நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதை அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.இதை கேட்க பெற்றோர் பள்ளிக்கு சென்று உள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்று உள்ளதாக தகவல் தெரித்தனர்.. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வசம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்தகவல் அறிந்து அங்கசென்ற அதிகாரிகள் பெற்றோர்களிடம் நீங்கள் முறையாக விண்ணப்பம் கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க படும் என்றனர். இந்நிலையில் இரவு திடீரென பெற்றோர்கள் திருப்பூர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள காட்டம்பட்டி பஸ்நிலையம். அருகே சாலைமறியல் செய்தனர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறையினர் தெரிவித்ததின் பேரில் சாலை மறியலை பொது மக்கள் கைவிட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.